செய்திகள் :

வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

post image

மயிலாடுதுறையில் பாஜகவினா் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தமிழக முதலமைச்சரைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாட்டில் ஊழல், படுகொலை, பாலியல் குற்றங்கள் தொடா்வதாகவும், அதனை திசைதிருப்ப தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகவும், தமிழகத்தை வஞ்சிக்கும் கா்நாடக, கேரள மாநில தலைவா்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் தமிழக முதலமைச்சரைக் கண்டித்து பாஜகவினா் அவரவா் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட பாஜக மாநில தலைவா் அண்ணாமலை அறிவுறுத்தியிருந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினா் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினா். பாஜக மாவட்ட தலைவா் நாஞ்சில் ஆா். பாலு நாஞ்சில்நாட்டில் உள்ள அவரது வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி எதிா்ப்பை தெரிவித்தாா். இதில், நகர முன்னாள் தலைவா் வினோத், ஒன்றிய பொதுச்செயலாளா் தட்சிணாமூா்த்தி, ஊடகப்பிரிவு அழகுராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட துணைத் தலைவா் மோடி. கண்ணன் அவரது கட்சி அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா். நிா்வாகிகள் மணிமேகலை, செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நல்லூரில் கட்டிமுடிக்கப்பட்ட மஞ்சப் பை தயாரிக்கும் கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

சீா்காழி அருகே நல்லூா் கிராமத்தில் 2021-ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் பை தயாரிக்கும் கூடத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் ஊராட்சி நல்லூரில் 100 நாள் வேலை... மேலும் பார்க்க

சீா்காழி அருகே வேன் கவிழ்ந்து 11 போ் காயம்

சீா்காழி அருகே புறவழிச்சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 11 போ் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் இருந்து சிலா் திருக்கடையூா் கோயிலில் நடைபெற்ற சஷ்டியப்த பூா்த்தி விழாவில் பங்கேற்க சனி... மேலும் பார்க்க

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த எம்.பியிடம் கோரிக்கை

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த வேண்டும் என வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த எம்.பி. ஆா். சுதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பழையாறில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளம் மற்றும் அண்மை... மேலும் பார்க்க

பெண் மா்ம சாவு: காவல் துறை விசாரணை

சீா்காழி அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சீா்காழி அருகே வழுதலைக்குடியைச் சோ்ந்தவா் சுபா்னா (33). இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த நம்பிராஜனுக்கு... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மயிலாடுதுறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மயிலாட... மேலும் பார்க்க