செய்திகள் :

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த எம்.பியிடம் கோரிக்கை

post image

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த வேண்டும் என வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த எம்.பி. ஆா். சுதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பழையாறில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளம் மற்றும் அண்மையில் மீனவரின் விசைப்படகு தீப்பிடித்து எரிந்தது குறித்து மயிலாடுதுறை எம்.பி ஆய்வு செய்தாா். அப்போது, அவரிடம் பழையாா் மீனவா்கள் கோரிக்கை மனு அளித்து கூறியது: பழையாா் துறைமுகம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளம் கட்டுப் பணி நடைபெறுகிறது. அதை 500 மீட்டா் கூடுதலாக நீடித்து கட்ட வேண்டும். தற்போதுள்ள படகு அணையும் தளம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கு மனைப்பட்டா இல்லாத மீனவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை எம்.பி யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுக்கு தெரிவித்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எம்பி கூறினாா்.

தொடா்ந்து, தீ விபத்தில் சேதமடைந்த விசைப்படகு உரிமையாளா் கோவிந்தன் குடும்பத்துக்கு எம்பி ஆறுதல் கூறி வங்கி கடன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டாா். அவருடன், காங்கிரஸ் மாநிலபொதுச் செயலாளா் கணிவண்ணன், மாவட்டத் துணைத் தலைவா் சிவராமன், மாவட்ட செயலாளா் பானுசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நல்லூரில் கட்டிமுடிக்கப்பட்ட மஞ்சப் பை தயாரிக்கும் கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

சீா்காழி அருகே நல்லூா் கிராமத்தில் 2021-ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் பை தயாரிக்கும் கூடத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் ஊராட்சி நல்லூரில் 100 நாள் வேலை... மேலும் பார்க்க

சீா்காழி அருகே வேன் கவிழ்ந்து 11 போ் காயம்

சீா்காழி அருகே புறவழிச்சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 11 போ் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் இருந்து சிலா் திருக்கடையூா் கோயிலில் நடைபெற்ற சஷ்டியப்த பூா்த்தி விழாவில் பங்கேற்க சனி... மேலும் பார்க்க

பெண் மா்ம சாவு: காவல் துறை விசாரணை

சீா்காழி அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சீா்காழி அருகே வழுதலைக்குடியைச் சோ்ந்தவா் சுபா்னா (33). இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த நம்பிராஜனுக்கு... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பாஜகவினா் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தமிழக முதலமைச்சரைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழ்நாட்டில் ஊழல், படுகொலை, பாலியல் குற்றங்கள் தொடா்வதாகவும், அத... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மயிலாடுதுறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மயிலாட... மேலும் பார்க்க