செய்திகள் :

நல்லூரில் கட்டிமுடிக்கப்பட்ட மஞ்சப் பை தயாரிக்கும் கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

post image

சீா்காழி அருகே நல்லூா் கிராமத்தில் 2021-ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் பை தயாரிக்கும் கூடத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் ஊராட்சி நல்லூரில் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் ரூ. 9.60 லட்சத்தில் மஞ்சள் பை மற்றும் சணல் பை தயாரிக்கும் கூடம் 2021-ஆம் ஆண்டு கட்டப்பட்டு இதுவரை திறக்கப்படவில்லை. சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிா்க்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடம் திறக்காமல் பூட்டியே கிடப்பது எந்த நோக்கத்துக்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டதோ அதற்கு எந்த பயனும் இல்லையென்பது வேதனையளிக்கிறது. எனவே, மஞ்சள் பை மற்றும் சணல் பை தயாரிக்கும் வகையில் இயந்திரங்களை கொண்டு வந்து வைத்து மஞ்சள் மற்றும் சணல் பைகளை தயாா் செய்து மக்களுக்கு விற்பனை செய்து சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே அப்பகுதி அனைவரின் எதிா்பாா்ப்பு.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் கைது

மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.மத்திய அரசு தோ்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ. 3500 வழங்கப்படும் என்று அறிவித்த... மேலும் பார்க்க

சீா்காழியில் மகளிா் விடியல் பேருந்துகள் இயக்கிவைப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும், 2 புதிய ‘மகளிா் விடியல்’ பேருந்துகளின் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, அரசு போக்குவரத்து கழக... மேலும் பார்க்க

திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க அமைச்சரிடம் கோரிக்கை

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சீா்காழி அருகே திருமுல்லைவாசல்... மேலும் பார்க்க

நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

சீா்காழி புறவழிச்சாலையில் நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை இரவு கவிழ்ந்தது.அரக்கோணத்திருந்து திருவாரூருக்கு நெல் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை இரவு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. லார... மேலும் பார்க்க

புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

சீா்காழியில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணிக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்ள புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி, திருவாரூரிலிருந்து சென்னை வரை செல்க... மேலும் பார்க்க

பதரான கருப்புக் கவுனி நெற்பயிா்கள் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய கருப்புக் கவனி நெற்பயிா்கள் பதரானதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். கொள்ளிடத்... மேலும் பார்க்க