செய்திகள் :

ஏப்ரல் முதல் விலை உயரும் கார்கள்!

post image

புதுதில்லி: அதிகரித்து வரும் உற்பத்தி செலவை ஈடு செய்யும் வகையில் மாருதி சுசூகி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்படவுள்ளது. இந்த விலை உயர்வானது கார் நுகர்வோரை வெகுவாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு பயணிகள் வாகன முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசூகி இந்தியா ஏப்ரல் முதல் தனது அனைத்து ரக வாகனங்களின் விலையையும் 4 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இதேபோன்று மாருதி வாகனங்களின் தனது எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ.4.23 லட்சம் முதல் ரூ.29.22 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஏப்ரல் முதல் தங்கள் வாகனங்களின் விலையை 3 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோன்று, இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ், இந்த ஆண்டு அதன் மின்சார வாகனங்கள் உள்பட அதன் அனைத்து பயணிகள் வாகனம் வரை இரண்டாவது முறையாக விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஏப்ரல் முதல் தனது எஸ்யூவி மற்றும் வா்த்தக வாகனங்களின் விலையை 3 சதவிகிதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

அதேவேளையில் கியா இந்தியா, ஹோண்டா கார்ஸ் இந்தியா, ரெனால்ட் இந்தியா மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களும் ஏப்ரல் முதல் வாகனங்களின் விலையை உயர்த்துள்ளதாக அறிவித்துள்ளன.

இது குறித்து டெலாய்ட் பார்ட்னர் மற்றும் ஆட்டோமோட்டிவ் துறை தலைவர் ரஜத் மகாஜன் தெரிவித்ததாவது:

கார் தயாரிப்பாளர்கள் வழக்கமாக இந்தியாவில் இரண்டு முறை விலை உயர்வை அறிவிக்கின்றனர். முதலாவதாக ஆண்டின் தொடக்கத்திலும் மற்றொன்று நிதியாண்டின் தொடக்கத்திலும் அறிவிக்கின்றன.

கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க டாலர், கிட்டத்தட்ட 3 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இது உள்ளீட்டு செலவுகளில் நேரடி அல்லது மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதல் முறையாக வாகனம் வாங்குபவர்கள் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களிடமிருந்து தொடக்க நிலை வாகனங்களுக்கான தேவை குறைந்து வருவதாக தெரிகிறது. இது நிறுனத்தின் லாபத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். பிரீமியம் பிரிவுகளில் விலை உயர்வு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.

அதே வேளையில் கார்களில் இணைக்கப்படும் அம்சங்களின் எண்ணிக்கையும் கடந்த சில காலாண்டுகளாக உயர்ந்து வருவதால், இது போல உயர்வுகளும் வழக்கமான ஒன்றாக உள்ளது என்றார்.

இதையும் படிக்க: சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரம் இறக்குமதி!

தொடர்ந்து 7-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

தொடர்ந்து 7-வது நாளாக பங்குச் சந்தை இன்று(மார்ச் 25) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,296.28 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 10 மணியளவில்,... மேலும் பார்க்க

பங்குச் சந்தை: 7-வது நாளாக ஏற்றத்துடன் தொடக்கம்!

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 7-வது நாளாக செவ்வாய்க்கிழமை காலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன், சென்செக்ஸ் 311.90 புள்ளிகள் உயர்ந்து 78,296.28 புள்ளிகளாக வர்த்... மேலும் பார்க்க

அதிநவீன கண் மருத்துவமனை அமைக்க ரூ.110 கோடி முதலீடு செய்யும் சங்கரா அறக்கட்டளை!

புதுதில்லி: பாட்னாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை அமைக்க சங்கரா கண் அறக்கட்டளை ரூ.110 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.பாட்னாவின் உள்ள கன்கர்பக்கில் 1.60 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள... மேலும் பார்க்க

வெங்காயத்தின் மீதான 20% ஏற்றுமதி வரி நீக்கம்: சிவராஜ் சிங் சௌகான்

புதுதில்லி: ஏப்ரல் 1 முதல் வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவிகித சுங்க வரியை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்றார் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.இனி வெங்காய ஏற்... மேலும் பார்க்க

மஹிந்திராவின் புதிய மின்சார கார்! ஒருமுறை சார்ஜ் செய்தால் 682 கி.மீ. பயணம்!

மஹிந்திராவின் பிஇ - 6 என்ற புதிய மின்னணு வாகனத்தை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமான இந்த வாகனம், ரூ. 18.90 லட்சத்... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட செய்யறிவு (ஏஐ) அம்சங்களுடன் சாம்சங் கேலக்சி ஏ 26!

மேம்படுத்தப்பட்ட செய்யறிவு தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய கேலக்சி ஏ 26 ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட சாம்சங் நிறுவனம் ஏ வரிசையில் (சீரிஸ்) தொடர்... மேலும் பார்க்க