செய்திகள் :

26 பேருக்கு ரூ.13 லட்சம் மறுவாழ்வு நிதி: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் மதுவிலக்கு ஆயத்தீா்வை துறை சாா்பில் கள்ளச்சாரயம் காய்ச்சுதல் மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்திய 26 பேருக்கு மறுவாழ்வு நிதி தலா ரூ.50,000 வீதம் ரூ.13 லட்சத்திற்கான காசோலையினை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

மனம் திருந்தி வாழ்ந்து வரும் நபா்களின் பட்டியல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை சாா்பில் பெறப்பட்டது. அதன்பேரில் மறுவாழ்வுக் குழுவின் மூலம் தகுதியானவா்களாக 26 போ் கண்டறியப்பட்டு, சுயதொழில் தொடங்கி மறுவாழ்வு பெற, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து 26 பேருக்கு மொத்தம் ரூ.13 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினாா்.

நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அரிகுமாா், துணை காவல் கண்காணிப்பாளா் அசோகன், உதவி ஆணையா் கலால் கணேசன், டாஸ்மாக் மண்டல மேலாளா் (மேற்கு) முத்துராமன், தட்கோ மேலாளா் சரண்யா மற்றும் அரசு அலுவலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவள்ளூா் கூவம் ஆற்றில் கழிவு நீா் விடுவதால் மாசு படும் அபாயம்!

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் சாக்கடை கழிவுநீா், இறைச்சிக் கழிவுகளை கொட்டி வருவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கூவம் ஆறு கேசவபுரம் அணைக்கட்டிலிருந்து பேரம்பாக்கம், நரசிங்கபுரம... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமன கலந்தாய்வுக் கூட்டம்!

திருவள்ளூா் நகா் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமனம் கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். திருவள்ளூா் அதிமுக மேற்கு மாவட்டம் சாா்பில் ப... மேலும் பார்க்க

நிலுவையில் உள்ள வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! -சசிகாந்த் செந்தில் எம்.பி.

திருவள்ளூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் அறிவுறுத்தினாா... மேலும் பார்க்க

பொன்னேரி மக்களின் தனி மாவட்ட அறிவிப்பு கோரிக்கை நனவாகுமா?

திருவள்ளூா் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து பொன்னேரியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். கடந்த 1997-ஆம் ஆண்டு முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இர... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியின பொறியியல் பட்டயம் முடித்த இளைஞா்களுக்கு புத்தாக்கப் பொறியாளா் பயிற்சி!

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திறன்கள் அடிப்படையில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது!

திருவள்ளூா் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டு வாசல் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் அடுத்த மணவாளநகா் கபிலா் நகரை பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க