செய்திகள் :

குடிநீர் கட்டணம் வசூலுக்குச் சென்ற அலுவலர்கள் சிறை பிடிப்பு

post image

சேலம்: ஆத்தூர் அருகே குடிநீர் கட்டண வரி வசூலுக்குச் சென்ற அலுவலர்களை முற்றுகையிட்டு மக்கள் சனிக்கிழமை சிறை பிடித்தனா்.

முறையான குடிநீர் வழங்காமல் வரி மட்டும் எப்படி கேட்கலாம் என மக்கள் கேட்டபோது,அலுவலர்கள் தகாத வார்த்தையில் பேசியதாக கூறி சிறை பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 10 ஆவது வார்டு வடக்கு தலைநகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ள மக்களிடம் குடிநீர் கட்டண வரி வசூல் செய்வதற்காக நகராட்சி பொறியாளர் ஜெயமாலினி மற்றும் பொதுப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் சென்றனர்.அப்போது குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தங்கள் பகுதிக்கு 18 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும்,அவையும் முறையாக வழங்கப்படாத நிலையில், குடிநீர் கட்டணம் மட்டும் எப்படி வசூலிக்கலாம் என மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு! - டி.கே. சிவகுமார் பேச்சு

அப்போது அலுவலர்கள் மக்களிடம் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அதிகாரிகளை சிறை பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களை அலுவர்கள் தங்களது செல்போன்களில் விடியோ பதிவு செய்தனர். இதையடுத்து மக்களும் தங்களது செல்போன்களில் விடியோ பதிவு செய்ததை அலுவலர்கள் தட்டிவிட்டதால் செல்போன் உடைந்தது. வாக்குவாதம் தீவிரமடைந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. நகராட்சி அலுவலர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மானியத்தில் கால்நடை பண்ணைகள்: தமிழக அரசு அழைப்பு

மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக, மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கால்நடைகளின் எண்ணிக்கையை உயா்த்தவும் தொழில்முனைவோரை உ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஆட்சியருக்கு பிடியாணை: உயா்நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவுக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

மாநிலங்கள் உதய தினத்தை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

மாநிலங்கள் உருவான தினத்தை ஆளுநா் மாளிகையில் நடத்தினால் மட்டும் போதாது, அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி தெரிவித்தாா். சென்னை, கிண்டி ... மேலும் பார்க்க

கோயில் கட்டுமானப் பணிகளில் தரம்: அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்தல்

கோயில் கட்டுமானத் தரத்தில் எவ்விதத்திலும் குறைவும் ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பணிகள் நடைபெறுவதற்கு பொறியாளா்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்... மேலும் பார்க்க

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாக பதிவா?

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிஎஸ் 4 ரக வாகனங்கள் கடந்த 202... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது: ஜி.கே.வாசன்

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடத்திய கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ப... மேலும் பார்க்க