செய்திகள் :

மம்தா பானர்ஜியின் இங்கிலாந்து பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

post image

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இங்கிலாந்து பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல்வர் மம்தா மற்றும் அவரது குழுவினரும் இன்று காலை 9.10 மணிக்கு கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு முதலில் துபை செல்லவிருந்தனர். மீண்டும் அதே துபையிலிருந்து இரவு 8 மணிக்கு லண்டன் செல்லவிருந்தனர்.

வெள்ளியன்று பிற்பகல் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல்வரின் பயணம் இரண்டு நாள்களுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்ற மாநில செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், அங்கு நிலைமை சீரடைந்ததையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா இன்று மாலை இங்கிலாந்து செல்லவிருக்கின்றார்.

மார்ச் 24 அன்று லண்டன் செல்லும் மம்தா இந்தியத் தூதரகம் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதன் பிறகு மார்ச் 25 அன்று தொழிலதிபர்கள், வணிகர்களைச் சந்திக்க உள்ளார். மார்ச் 26ல் வணிகம் கூட்டத்தில் பங்கேற்கிறார். மார்ச் 27ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியில் உரையாற்றுகிறார். இறுதியாக, மார்ச் 28ல் அவர் லண்டனிலிருந்து கொல்கத்தாவுக்குப் புறப்படுகிறார்.

முன்னதாக, 2015இல் மம்தா பானர்ஜி இங்கிலாந்து சென்றார். அப்போதைய மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா உள்பட அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் அவருடன் இருந்தனர்.

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலையா? விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது சிபிஐ!

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்த வழக்கின் விசாரணை அறிக்கையை மத்திய குற்ற புலனாய்வு (சிபிஐ) பிரிவு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சீல் செய்யப்பட்ட கவரில் சனிக... மேலும் பார்க்க

நீதிபதி வீட்டில் கணக்கில் வராத பணம் இருந்ததா? 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

புது தில்லி: பண சா்ச்சையில் சிக்கியுள்ள நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டிலிருந்து கோடிக்கணக்கிலான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா என்பதை விரிவாக விசாரித்து உண்மையை கண்டறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழிகா... மேலும் பார்க்க

ஒடிசா: மழை, ஆலங்கட்டி மழைக்கு 2 பேர் பலி, 600 வீடுகள் சேதம்

ஒடிசாவில் மழை, ஆலங்கட்டி மழைக்கு 2 பேர் பலியானதோடு 67 பேர் காயமடைந்தனர். ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையோடு ஆலங்கட்டி மழையும் பெய்ததால் மக்கள் கடும் அவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் இருந்து 27 மியான்மர் நாட்டவர் நாடு கடத்தல்

மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்த 27 மியான்மர் நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.மணிப்பூர் மாநிலம், தெங்னௌபால் மாவட்டத்தில் உள்ள மோரேயில் உள்ள இந்தோ - மியான்மர் வாயிலில... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் கருகிய நிலையில் இரட்டை குழந்தைகள், பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஜார்க்கண்டில் கருகிய நிலையில் பெண் மற்றும் அவரின் இரட்டை குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 22 வயது பெண் ம... மேலும் பார்க்க

கேரளம்: தேநீர் என நம்ப வைத்து 12 வயது சிறுவனுக்கு மது கொடுத்த பெண் கைது

கேரளத்தில் தேநீர் என நம்ப வைத்து 12 வயது சிறுவனுக்கு மது கொடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் பீருமேடு பகுதியில் உள்ள தனது வீட்டில் பெண் ஒருவர் கருப்பு தேநீர் என்று... மேலும் பார்க்க