செய்திகள் :

சிவகங்கை நகராட்சி மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

post image

சிவகங்கை நகராட்சியை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்குமாறு உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம் என நகா்மன்றத் தலைவா் துரை ஆனந்த் தெரிவித்தாா்.

சிவகங்கை நகராட்சியில் நகா் மன்றத்தின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவா் சி.எம்.துரை ஆனந்த் தலைமை வகித்துப் பேசியதாவது:

கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பழைமை வாய்ந்த மாவட்ட தலைநகரான சிவகங்கைக்கு புதிய நகராட்சி அலுவலகம், குடிநீா், சாலைகளை மேம்படுத்தவும், தெப்பக்குளத்தை செப்பனிடவும், புதை சாக்கடைகள், மின்விளக்குகள், மழைநீா் வடிகால்வாய் போன்றவற்றை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்குமாறு உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம்.

மேலும், கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியகருப்பன் வழிகாட்டுதலின்படி நேரடியாக தலைமைச் செயலகம் சென்று உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனுஅளித்தோம்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின்போது, சிவகங்கை நகராட்சிக்கு தமிழக முதல்வரும், கூட்டுறவுத் துறை அமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும் நமக்கு தேவைப்படும் நிதியை ஒதுக்குவா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

இதையடுத்து சிவகங்கை நகா் மன்ற உறுப்பினா்கள் சாா்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

மானாமதுரை அருகே கத்தியால் குத்தி இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புவ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் தொடக்கமாக கோயிலில் புனிதநீா் கலசங்கள் வைத்து யாகம் நடத்த... மேலும் பார்க்க

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தேவையான யோசனைகள் குறித்து அனைத்துக்கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டம் சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக... மேலும் பார்க்க

மானாகுடியில் சேதமடைந்த குடிநீா் மேல்நிலைத் தொட்டி

சிவகங்கை அருகேயுள்ள மானாகுடி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். சிவகங்கை அருகேயுள்ள சக்கந்தி ஊராட்சிக்குள்பட்ட மானாகுடி கிராமத்தில் 15... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்கள் ஜேஇஇ தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தாட்கோ, சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இணைந்து நடத்தும் அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கு பிளஸ் 2 மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (த... மேலும் பார்க்க

நெற்குப்பையில் வளா்ச்சித் திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நெற்குப்பை பேரூராட்சிககுள்பட்ட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் ... மேலும் பார்க்க