செய்திகள் :

நரம்பியல் நோயால் வேலையை இழந்த இளைஞர் விபரீத முடிவு - கடிதத்தை படித்த போலீஸார் அதிர்ச்சி

post image

மும்பையில் வசிக்கும் பெங்களூரைச் சேர்ந்த நவீன் (27) என்பவரின் சகோதரி, மும்பை போலீஸாருக்கு இமெயில் மூலம் ஒரு தகவலை அனுப்பி இருந்தார்.

அதில் மும்பை வசாய் பகுதியில் வசிக்கும் தனது சகோதரனை கடந்த சில நாள்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

உடனே போலீஸார் அப்பெண் கொடுத்திருந்த நவீன் போன் நம்பர் மூலம் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்தனர். அவர் வசாய் அருகில் உள்ள காமன் என்ற இடத்தில் இருக்கும் பங்களாவில் வாடகைக்கு வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வீட்டு வாசலில் அறிவிப்பு

`லைட் போடாதீர்கள், வீடு முழுக்க கார்பன் மோனோக்ஸைடு'

அந்த வீட்டிற்கு போலீஸார் சென்றபோது வீட்டு வாசலில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் லைட்டை போடாதீர்கள். வீட்டில் கார்பன் டை ஆக்ஸைடு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

போலீஸார் முன்னெச்சரிக்கையாக வீட்டிற்குள் சென்ற போது அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது போன்று வீடு முழுக்க கார்பன் டை ஆக்ஸைடு இருந்தது. அங்கிருந்த கார்பன் டை ஆக்ஸைடு சிலிண்டர் திறந்துவிடப்பட்டு இருந்தது.

நரம்பியல் நோயால் வேலையிழந்த விரக்தி

விஷவாயு வெளியில் செல்லக் கூடாது என்பதற்காக கார்பென்ட்டரை அழைத்து வந்து ஜன்னல் சீல் வைக்கப்பட்டு இருந்தது. அவர் விஷவாயு தாக்கி இறந்திருந்தார்.

தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அக்கடிதத்தில் தனக்கு நரம்பியல் தொடர்பாக இரண்டு நோய்கள் இருக்கிறது. அது குறித்து 12-க்கும் மேற்பட்ட டாக்டர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டேன். அதனை குணப்படுத்த முடியாது என்று கூறி யாரும் உதவவில்லை.

சடலம்
சடலம்

இதனால் வேலையும் பறிபோய்விட்டது. உடல்நிலையும் தொடர்ந்து மோசமடைந்து கொண்டே வந்தது. இதனால் மேற்கொண்டு வேலைக்குச் சென்று என்னால் வாழ முடியாது என்பதால் இம்முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதோடு தனக்கு உதவி செய்த நண்பர்கள், குடும்ப நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், தனக்கு இதைத்தவிர வேறு வழி தெரியவில்லை என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

விருதுநகர்: தொட்டில் கயிற்றில் ஊஞ்சலாடி விளையாடிய சிறுவன்; கழுத்தில் கயிறு இறுகி பலி

விருதுநகரில் தொட்டில் கயிற்றில் ஊஞ்சலாடி விளையாடிய சிறுவன் கழுத்தில் கயிறு இறுகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர்... மேலும் பார்க்க

Ooty: "போலீஸ் அடித்து மிரட்டியதால் விஷம் குடித்தேன்" - கூலித்தொழிலாளரின் மரண வாக்குமூல பின்னணி என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எமரால்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவனய்யா என்கிற குமார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க விவசாயக் கூலித்தொழிலாளி.மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ள... மேலும் பார்க்க

காட்பாடி: கழுத்தில் 6 அடி நீள பாம்புடன் யாசகம் கேட்ட கும்பல்; பீதியில் ஓட்டமெடுத்த மக்கள்!

`பீதியைக் கிளப்பாம போங்க..’வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிறுத்தப் பகுதியில், கடந்த 18-ம் தேதி இரவு பெண் உள்ளிட்ட நான்கு பேர் 6 அடி நீளமுள்ள பெரிய பாம்புகளை கழுத்திலும், தோள் மீ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மாணவரைக் கொன்று சடலத்தை முட்புதரில் வீசிய கும்பல்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே நார்த்தவாட பகுதியில் உள்ள முட்புதரில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் சடலம் கிடப்பதாக திருவாலங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.இதையடுத்து ச... மேலும் பார்க்க

சம்பள பிரச்னை, தொழிலாளர்கள் மீது கோபம்... பஸ்சிற்கு தீவைத்தவிட்டு நாடகமாடிய ஓட்டுநர்; நடந்தது என்ன?

புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹின்சேவாடி பகுதியில் தனியார் கம்பெனி தொழிலாளர்களை கம்பெனிக்கு ஏற்றிச்சென்ற மினி பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இத்தீவிபத்தில் பஸ்சின் பின் கதவு திறக்காமல் ... மேலும் பார்க்க

பிரிந்து சென்ற லிவ் இன் பார்ட்னரைக் கடத்தி ரூ.12 கோடி கேட்ட பெண்

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் நிகில் பார்மர் (32). ஐ.ஐ.எம். பட்டதாரியான நிகில் நிதி மேலாண்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு வரை பிரீத்தி என்ற பெண்ணுடன் நான்கு ஆண்டுகள் லிவ் ... மேலும் பார்க்க