செய்திகள் :

காவலர்களின் என்கவுன்டரில் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட குற்றவாளி சுட்டுக்கொலை!

post image

பிகார் மாநிலத்தில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளி காவல் துறையினரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பிகாரின் போஜ்பூர் மற்றும் பூர்ணியா ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கொள்ளை வழக்குகளின் முக்கிய குற்றவாளியான சுன்முன் ஜா (எ) ராகேஷ் ஜா என்பவருக்கு கடந்த மார்ச் 10 அன்று அரா பகுதியிலுள்ள பிரபல நகைக் கடையில் நடந்த கொள்ளையில் தொடர்புள்ளது என சந்தேகிக்கப்பட்டு அவரை காவல் துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், கிடைக்கப்பட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில் அராரியா மாவட்ட காவல் துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து இன்று (மார்ச் 22) அதிகாலை 4 மணியளவில் ராகேஷும் அவரது கூட்டாளிகளும் பதுங்கியுள்ளதாகக் கூறப்பட்ட நார்பட்கஞ்ச் எனும் பகுதியை சுற்றி வளைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, போலீஸார் தங்களை சுற்றி வளைத்திருப்பதை உணர்ந்த ராகேஷ் அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதுடன் காவலர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகின்றது.

இதையும் படிக்க: இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம்: பினராயி விஜயன் பேச்சு

இதற்கு, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ராகேஷின் உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்துள்ளார். மேலும், அவரது கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், காவலர்கள் படுகாயமடைந்த ராகேஷை உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நடவடிக்கையில் நான்கு காவலர்களும் காயமடைந்துள்ளதாகவும் ஆனால், அவர்களது உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லையெனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராகேஷ் ஜாவை ரூ.3 லட்சம் சன்மானம் அறிவித்து காவல் துறையினர் தேடி வந்தனர். மேலும், தற்போது தப்பியோடிய அவரது கூட்டாளிகளைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைநகரின் முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாக சூடான் ராணுவம் அறிவிப்பு!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளது.சூடான் ராணுவம் அவர்களது எதிராளிகளான துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளின் (ஆர்.எஸ்.எ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கையெறி குண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதலில் 3 பலியாகியுள்ளனர்.கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குர்ராம் மாவட்டத்தில் கட்டுமானம் மேற்கொ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 5 கொலைகள்; அதிமுக ஆட்சியைவிட அதிகம்! - அன்புமணி ராமதாஸ்

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் படுகொலைகள் அதிகமாக நடந்திருப்பதாகவும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? எனவும் பாமகதலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸை உளவுப் பார்க்கின்றதா சீனா? தொடரும் உளவாளிகளின் கைதுகள்!

பிலிப்பின்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக தகவல் சேகரித்த சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலிப்பின்ஸில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய துறைகளில் சீனாவின் ஈடுபாடுள்ளதா? என்று எழுந்த சந்தேகத்தினால் அந... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட... மேலும் பார்க்க

தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற உத்தரவு!

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று (மார்ச் 21) ... மேலும் பார்க்க