செய்திகள் :

தலைநகரின் முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாக சூடான் ராணுவம் அறிவிப்பு!

post image

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளது.

சூடான் ராணுவம் அவர்களது எதிராளிகளான துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளின் (ஆர்.எஸ்.எஃப்.) கட்டுப்பாட்டிலிருந்து அந்நாட்டு அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றியதாக நேற்று (மார்ச் 21) அறிவித்திருந்தது.

இந்நிலையில், தலைநகர் கார்டூமிலுள்ள சூடானின் மத்திய வங்கியின் தலைமைச் செயலகம், முக்கிய அரசு கட்டடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை மீட்டு கைப்பற்றியதாகவும் இதில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக இன்று (மார்ச் 22) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சூடானின் ராணுவப் படைகளின் செய்தித் தொடர்பாளர் நபில் அப்தல்லா கூறுகையில், சூடான் ராணுவம் மத்திய கார்டூமிலுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமைச் செயலகம் மற்றும் கோரிந்தியா விடுதியிலிருந்து துணை ராணுவப்படையை வெளியேற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை.. மக்களைச் சந்திக்கிறார் போப்!

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து துணை ராணுவத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் சூடானின் ராணுவப் படை மற்றும் ஆர்.எஸ்.எஃப். துணை ராணுவப் படைக்கும் இடையிலான மோதலில் 30,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்த போரின் துவக்கத்தில் துணை ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமில் அதிபர் மாளிகை, அரசு தொலைக்காட்சி அலுவலகம் மற்றும் ராணுவ தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை ஆக்கிரமித்தது. மேலும், அங்குள்ள மக்களின் வீடுகளையும் ஆக்கிரமித்து அதனை எதிராளிகளை தாக்கும் தளமாக பயன்படுத்தி வந்துள்ளது.

இருப்பினும், கடந்த சில மாதங்களாக இந்த போரில் முன்னிலை பெற்று வரும் சூடான் ராணுவம் தலைநகர் கார்டூம் மற்றும் ஒம்துமன், வடக்கு கார்டூம் உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய நகரங்களை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் மூத்த அரசியல் தலைவர் பலி!

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த அரசியல் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவின் கான் யூனிஸ் பகுதியின் மீது நேற்று (மார்ச் 22) நள்ளிரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் ... மேலும் பார்க்க

சூறாவளி தாக்கிய அமெரிக்க மாகாணத்தில் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அப்பகுதியுள்ள குடிமக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. வட கரோலினா மாகாணத்தின் போல்க் கவுண்டி, அதன் அருகிலுள்ள புர்கே மற்றும் மேடிசன் ... மேலும் பார்க்க

ரமலான் சிறப்பு ரயில்கள்: முன்பதிவு தொடங்கியது!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.ரமலான் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைக் குறைக்க திருச்சி - தாம்பரம் ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06048) வரும்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கையெறி குண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதலில் 3 பலியாகியுள்ளனர்.கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குர்ராம் மாவட்டத்தில் கட்டுமானம் மேற்கொ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 5 கொலைகள்; அதிமுக ஆட்சியைவிட அதிகம்! - அன்புமணி ராமதாஸ்

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் படுகொலைகள் அதிகமாக நடந்திருப்பதாகவும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? எனவும் பாமகதலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸை உளவுப் பார்க்கின்றதா சீனா? தொடரும் உளவாளிகளின் கைதுகள்!

பிலிப்பின்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக தகவல் சேகரித்த சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலிப்பின்ஸில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய துறைகளில் சீனாவின் ஈடுபாடுள்ளதா? என்று எழுந்த சந்தேகத்தினால் அந... மேலும் பார்க்க