செய்திகள் :

போருக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டம்!

post image

இஸ்ரேல் - காஸா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளில் போராட்டம் வலுத்து வருகிறது.

லண்டன், ஸ்பெயின்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான மக்கள் அந்நாட்டுக் கொடிகளை ஏந்தி தூதரகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்பெயின் நாட்டின் சான் செபாஸ்டியன் நகரில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி பேரணியில் மக்கள் ஈடுபட்டனர்.

பாலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு பிரான்ஸில் இசை வாத்தியங்கள் முழங்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று லண்டனிலும் ஏராளமான மக்கள் கூடி முழக்கங்களை எழுப்பிப் போராடினர். இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்று தூதரகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.

ஸ்வீடனிலும் சாலைகளில் குவிந்த மக்கள் காஸா மக்களுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடரும் போர்

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இடையே 2023 அக்டோபர் 7 முதல் போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் படைகளைக் குறிவைத்து காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். எனினும் காஸாவில் உள்ள இஸ்ரேலைச் சேர்ந்த பிணைக் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் படையினர் முறையாக கடைபிடிக்கவில்லை எனக் கூறி காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலுடன் எல்லையைப் பகிா்ந்துவரும் லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா படையினா், ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினா். தற்போது ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிக்க | போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்!

14 மாதங்களில் 1.5 லட்சம் பேருக்கு காலரா! எங்கு தெரியுமா?

கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் ஒரு லட்சம் பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

இசை கேட்டு வளர்ந்த கோழிக்கறி உணவு! விலை ரூ. 5,500

சமைத்த கோழிக்கறி உணவுக்கு தொழிலதிபர் ஒருவர் ரூ. 5500 பணம் செலுத்தியுள்ளார். இது குறித்து அந்த உணவகத்திடம் கேட்டபோது அவர்கள் அளித்த பதில், பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, அந்தக் கோழிக்கு நீர... மேலும் பார்க்க

அமெரிக்காவால் எதுவும் சாத்தியமே! -கிரீன்லாந்து குறித்து துணை அதிபர் வான்ஸ்

கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவது சாத்தியமே என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸ். இவ்விவகாரம் குறித்து ஜே.டி. வான்ஸ் அளித்துள்ள பேட்டியொன்றில், “கிரீன்லாந்தை அமெரிக்கா விலை... மேலும் பார்க்க

ஆசியாவில் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு பாகிஸ்தானா?

தெற்காசிய நாடுகளில், வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு என்ற பட்டியலில் பாகிஸ்தான் ஏற்கனவே முதலிடத்தைப் பிடித்திருந்த நிலையில், கடுமையான பணவீக்கம் காரணமாக தற்போது ஆசிய நாடுகளிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவ... மேலும் பார்க்க

கனடாவில் தேர்தல்: பதவியேற்ற 10 நாள்களில் நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர்!

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்று இருக்கும் மார்க் கார்னி, முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார்.வருகின்ற அக்டோபர் மாதம் வரை பதவிக் காலம் இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது!

காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண... மேலும் பார்க்க