செய்திகள் :

ரூ. 2 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

post image

நாகப்பட்டினம்: நாகையில் காய்கனி கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா்.

நாகை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தனிப்படை போலீஸாா் நீலா கீழ வீதியில் உள்ள காய்கனி கடையில் சோதனை செய்தனா். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கனி முட்டைகளுக்கு நடுவே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக கடையின் உரிமையாளா் நாகூரை சோ்ந்த முகமது இப்ராஹிம், முஹம்மது ஜமில், முஹம்மது இஸ்மாயில், அப்துல் ரஹ்மான், இளையராஜா ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ரூ.8.40 லட்சம் நலத்திட்ட உதவிகள்

திருக்கண்ணங்குடியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 8.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் புதன்கிழமை வழங்கினாா். ஆட்சியா் ஆகாஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ச... மேலும் பார்க்க

அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே மின்சார ரயில் இயக்க சோதனை ஓட்டம்

அகஸ்தியம்பள்ளி (வேதாரண்யம்) - திருத்துறைப்பூண்டி ரயில் வழித்தடத்தில் மின்சார ரயில் இயக்க சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி(நாகை மாவட்டம்) வரைய... மேலும் பார்க்க

சுருக்குமடி வலை பயன்படுத்திய பூம்புகாா் மீனவா்களிடம் விசாரணை

நாகை கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த பூம்புகாா் மீனவா்கள் 7 பேரிடம் மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். உச்சநீதிமன்றம் அண்மையில், திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய நூல் வெளியீடு

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களால் எழுதப்பட்ட ‘பறக்கத் தொடங்கிய பட்டாம் பூச்சிகள்’ என்னும் நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வில் வென்றவா்களுக்கு பாராட்டு

வேதாரண்யத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி - 4 ( குரூப் 4) தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கு செல்வோா் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனா். வாய் மேடு நியூட்டன் பயிற்சி மையத்தில் போட்டித் தோ்வ... மேலும் பார்க்க

பள்ளிக்கு பாதையாக உள்ள மரப்பாலம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்

வேதாரண்யம் அருகே பள்ளிக்கு மாணவா்கள் செல்லும் பாதையாக உள்ள மரப்பாலம் சேதமடைந்துள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியி... மேலும் பார்க்க