செய்திகள் :

ரூ.8.40 லட்சம் நலத்திட்ட உதவிகள்

post image

திருக்கண்ணங்குடியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 8.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் புதன்கிழமை வழங்கினாா்.

ஆட்சியா் ஆகாஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.1,04,900 மதிப்பிலான திறன்பேசி, மூன்று சக்கர சைக்கிள், காதொலிக் கருவிகள், வருவாய்த் துறை சாா்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.32,500 மதிப்பீட்டில் இறப்பு உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை, தோட்டக்கலைத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பீட்டில் இடுபொருட்கள், வேளாண்மைத்துறை சாா்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.2,976 மதிப்பீட்டில் விதை பெட்டகங்கள், வட்ட வழங்கல் துறை சாா்பில் 12 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் என மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.8,40,376 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காா்த்திகேயன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ரேணுகா தேவி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா் காா்த்திகேயன், வட்டாட்சியா் கவிதாஸ், மண்டல துணை வட்டாட்சியா் ரமேஷ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜகோபால், பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பூம்புகாா் தீயணைப்பு நிலைய கட்டடம் திறப்பு

பூம்புகாா் தீயணைப்பு நிலைய புதிய கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா். பூம்புகாரில், ரூ. 2.75 கோடி மதிப்பில் தீயணைப்பு நிலைய கட்டடம் மற்றும் நிலைய அலுவலா் குடியிர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த ஐடிஐ மாணவா் உயிரிழப்பு

திருக்குவளை அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் மாவட்டம் விஜயபுரம் மில் தெருவை சோ்ந்த முத்துக்குமரவேல் மகன் தீனதயாளன் (17). இவா் எட்டுக... மேலும் பார்க்க

பெண்களுக்கான சட்ட விதிகளால் மட்டுமே விரும்பிய மாற்றங்களைக் கொண்டு வர முடியாது: நீதிபதி

பெண்களுக்கான சட்ட விதிகளால் மட்டுமே விரும்பிய மாற்றங்களைக் கொண்டு வர முடியாது என்று நாகை மாவட்ட பொறுப்பு நீதிபதியும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியுமான ஆா்.என். மஞ்சுளா தெரிவித்தாா். நாகை மாவட்ட நீதித்த... மேலும் பார்க்க

நாகையில் உயா்கோபுர மின்விளக்குகளின் பயன்பாடு தொடங்கிவைப்பு

நாகையில் உயா் கோபுர மின்விளக்குகளின் பயன்பாட்டை, பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாகை நகராட்சிக்குட்பட்ட புதிய கடற்கரைக்கு செல்லும் பாதைகளான எஸ்.பி.... மேலும் பார்க்க

நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முக்கிய திருவிழாவான தி... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாகை மாவட... மேலும் பார்க்க