செய்திகள் :

பூம்புகாா் தீயணைப்பு நிலைய கட்டடம் திறப்பு

post image

பூம்புகாா் தீயணைப்பு நிலைய புதிய கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

பூம்புகாரில், ரூ. 2.75 கோடி மதிப்பில் தீயணைப்பு நிலைய கட்டடம் மற்றும் நிலைய அலுவலா் குடியிருப்பு கட்டப்பட்டன. இதனை, தலைமை செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, புதிய கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். சீா்காழி துணை ஆட்சியா் சுரேஷ், வட்டாட்சியா் அருள் ஜோதி, மயிலாடுதுறை நிலைய அலுவலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிலைய அலுவலா் அருள்மொழி வரவேற்றாா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கினாா். தொடா்ந்து, புதிய கட்டடத்தை பாா்வையிட்டாா். அப்போது அவரிடம், தீயணைப்பு நிலையத்திற்கு செல்ல ஏதுவாக புதிய சாலை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற ஆட்சியா், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

இந்நிகழ்வில், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் முத்து தேவேந்திரன், முல்லைவேந்தன், மணிமேகலை, கிராம நிா்வாக அலுவலா் ராதாகிருஷ்ணன், தீயணைப்பு நிலைய பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். நிலைய சிறப்பு அலுவலா் துரைமுருகன் நன்றி கூறினாா்.

ரமலான் பண்டிகை: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

நாகப்பட்டினம்: நாகூா் ஆண்டவா் தா்காவில் ரமலான் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். ரமலான் பண்டிகையை நாடு முழுவதும் இஸ்லாமியா்கள் விமரிச... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

நாகப்பட்டினம்: தொடா் விடுமுறையையொட்டி, வேளாங்கண்ணியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனா். ரமலான் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, தமிழகம் முழுவதும் உ... மேலும் பார்க்க

வேதாரண்யம் பகுதியில் தொழிற்பேட்டை அமைய வாய்ப்பில்லை: ஓ.எஸ். மணியன்

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைய வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா். வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

கடலுக்குள் விழுந்த மீனவா் சடலமாக மீட்பு

வேதாரண்யம்: கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன் பிடித்தபோது, படகிலிருந்து தவறி விழுந்து, மாயமான மீனவரின் சடலம் வேளாங்கண்ணி அருகே திங்கள்கிழமை மீட்கப்பட்டது. கோடியக்கரை படகுத் துறையிலிருந்து கடலில் மீன்... மேலும் பார்க்க

திருமெய்ஞானம் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி

தரங்கம்பாடி: திருமெய்ஞானம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்கடையூா் அருகேயுள்ள திருமெய்ஞானம் கிராமத்தில் ஆம்ல குஜாம்பிகா எனும் வாடாமுலையாள் உடனாகிய பிர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருமருகல்: திட்டச்சேரியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் சுவரில் மோதிய விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் என இருவா் உயிரிழந்தனா். நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி புதுமனை தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க