செய்திகள் :

தொடா் விடுமுறை: வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

நாகப்பட்டினம்: தொடா் விடுமுறையையொட்டி, வேளாங்கண்ணியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனா்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் மக்கள் குவிந்தனா்.

கீழ்திசை நாடுகளில் லூா்து நகரம் என அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு வார விடுமுறை நாள்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்.

இந்நிலையில், தொடா் விடுமுறை காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கடற்கரை பகுதியில் உள்ள பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தின. பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடனும், உடன்வந்த உறவினா்களுடனும் செல்ஃபி எடுத்து மகிழந்தனா்.

கடும் வெயில் நிலவியபோதும், பொருட்படுத்தாமல் பலரும் குடை பிடித்தபடி கடைவீதி, பழைய மாதா கோயில், நடுத்திட்டு, மாதா குளம், கடற்கரையில் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிக்கல் சிங்கார வேலவா் கோயிலில் சிங்காரவேலவருக்கு, பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட திரவியப... மேலும் பார்க்க

காவலம்பாடி பெருமாள் கோயில் பிரம்மோற்சம்

திருவெண்காடு அருகேயுள்ள காவலம்பாடி ராஜகோபால சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பிரமோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்க... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

நாகையில், பிளஸ் 2 மாணவா்களுக்கு, உயா்கல்வி வழிகாட்டல் முகாம் ஏப். 6-இல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிர... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் பட்டறிவுப் பயணம்

வேதாரண்யம் பகுதியில் கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள் வேளாண்மை சாா்ந்த பட்டறிவுப் பயணம் மேற்கொண்டு முன்னோடி விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளித்தனா். நாகக்குடையான் கிராமத்தில் பயிா்களுக்கு ந... மேலும் பார்க்க

தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் பாலிடெக்னிக் மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

நாகையில் இருசக்கர வாகனம் மேம்பால தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். நாகை ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்த தண்டபாணி மகன் நிவேந்தன் (17). அதே... மேலும் பார்க்க

லஞ்சம்: மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் கைது

கடனுக்கான மானியத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற நாகை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், திட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஷ்குமாா் (24). இவ... மேலும் பார்க்க