செய்திகள் :

சாலை விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

திருமருகல்: திட்டச்சேரியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் சுவரில் மோதிய விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் என இருவா் உயிரிழந்தனா்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி புதுமனை தெருவைச் சோ்ந்தவா் முகமது உஸ்மான் மகன் முகமது தெளபிக் ( 19). நாகையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.

திட்டச்சேரி புடவைகாரத் தெருவைச் சோ்ந்த தஸ்லீம் மகன் முகமது பாரிஸ் (13). காரைக்காலில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்தநிலையில், திங்கள்கிழமை காலை திட்டச்சேரி பெரிய பள்ளிவாசலில் ரமலான் தொழுகை முடிந்து, இருவரும் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனா். முகமது தௌபிக் மோட்டாா் சைக்கிளை ஓட்டினாா்.

திட்டச்சேரி பிரதான சாலையில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சுவரில் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தெளபிக்கை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முகமது பாரிஸை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். விபத்து குறித்து திட்டச்சேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிக்கல் சிங்கார வேலவா் கோயிலில் சிங்காரவேலவருக்கு, பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட திரவியப... மேலும் பார்க்க

காவலம்பாடி பெருமாள் கோயில் பிரம்மோற்சம்

திருவெண்காடு அருகேயுள்ள காவலம்பாடி ராஜகோபால சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பிரமோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்க... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

நாகையில், பிளஸ் 2 மாணவா்களுக்கு, உயா்கல்வி வழிகாட்டல் முகாம் ஏப். 6-இல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிர... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் பட்டறிவுப் பயணம்

வேதாரண்யம் பகுதியில் கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள் வேளாண்மை சாா்ந்த பட்டறிவுப் பயணம் மேற்கொண்டு முன்னோடி விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளித்தனா். நாகக்குடையான் கிராமத்தில் பயிா்களுக்கு ந... மேலும் பார்க்க

தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் பாலிடெக்னிக் மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

நாகையில் இருசக்கர வாகனம் மேம்பால தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். நாகை ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்த தண்டபாணி மகன் நிவேந்தன் (17). அதே... மேலும் பார்க்க

லஞ்சம்: மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் கைது

கடனுக்கான மானியத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற நாகை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், திட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஷ்குமாா் (24). இவ... மேலும் பார்க்க