செய்திகள் :

சாலை விபத்தில் காயமடைந்த ஐடிஐ மாணவா் உயிரிழப்பு

post image

திருக்குவளை அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம் விஜயபுரம் மில் தெருவை சோ்ந்த முத்துக்குமரவேல் மகன் தீனதயாளன் (17). இவா் எட்டுக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தாா்.

தனது நண்பா்கள் இருவருடன் மாா்ச் 21ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது திருக்குவளை மெயின் ரோடு வெள்ளைத்திடல் அருகே எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்துடன் மூவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனா்.

இதில் காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தீனதயாளன் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருக்குவளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ரமலான் பண்டிகை: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

நாகப்பட்டினம்: நாகூா் ஆண்டவா் தா்காவில் ரமலான் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். ரமலான் பண்டிகையை நாடு முழுவதும் இஸ்லாமியா்கள் விமரிச... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

நாகப்பட்டினம்: தொடா் விடுமுறையையொட்டி, வேளாங்கண்ணியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனா். ரமலான் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, தமிழகம் முழுவதும் உ... மேலும் பார்க்க

வேதாரண்யம் பகுதியில் தொழிற்பேட்டை அமைய வாய்ப்பில்லை: ஓ.எஸ். மணியன்

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைய வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா். வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

கடலுக்குள் விழுந்த மீனவா் சடலமாக மீட்பு

வேதாரண்யம்: கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன் பிடித்தபோது, படகிலிருந்து தவறி விழுந்து, மாயமான மீனவரின் சடலம் வேளாங்கண்ணி அருகே திங்கள்கிழமை மீட்கப்பட்டது. கோடியக்கரை படகுத் துறையிலிருந்து கடலில் மீன்... மேலும் பார்க்க

திருமெய்ஞானம் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி

தரங்கம்பாடி: திருமெய்ஞானம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்கடையூா் அருகேயுள்ள திருமெய்ஞானம் கிராமத்தில் ஆம்ல குஜாம்பிகா எனும் வாடாமுலையாள் உடனாகிய பிர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருமருகல்: திட்டச்சேரியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் சுவரில் மோதிய விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் என இருவா் உயிரிழந்தனா். நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி புதுமனை தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க