செய்திகள் :

சூறாவளி தாக்கிய அமெரிக்க மாகாணத்தில் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

post image

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அப்பகுதியுள்ள குடிமக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

வட கரோலினா மாகாணத்தின் போல்க் கவுண்டி, அதன் அருகிலுள்ள புர்கே மற்றும் மேடிசன் ஆகிய மூன்று கவுண்டிகளிலும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாகாணத்தின் வட எல்லையில் விர்ஜீனியா மாகாணத்தின் அருகிலுள்ள ஸ்டோக்ஸ் கவுணிடியின் வனப்பகுதியிலும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வட கரோலினா பொது பாதுகாப்புத் துறை நேற்று (மார்ச் 22) இரவு 8.20 மணியளவில் அம்மாகாணத்தின் மேற்கு பகுதியிலுள்ள போல்க் கவுண்டியின் குடியிருப்பு வாசிகள் வெளியேற உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளின் தெரிவுநிலை குறைந்து வருவதினால் அங்குள்ள மீட்புப் பாதைகள் முடக்கப்படக்கூடிய அபாயமுள்ளது எனவே அப்பகுதி குடியிருப்பு வாசிகள் உடனடியாக வெளியேறவில்லை என்றால் அங்கேயே சிக்கிக்கொண்டு உங்களது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க: போருக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டம்!

மேலும், கொலம்பஸ் பகுதியில் குடியிருப்பு வாசிகள் தங்குவதற்கு கூடாரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2024 செப்டம்பரில் வட கரோலினா மாகாணத்தின் மேற்கு பகுதியில் ஹெலீன் சூறாவளி தாக்கியதில் அங்குள்ள முக்கிய நகரங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டு பெரும்பாலான உள்நாட்டு பாதைகளில் 2025 மார்ச் மாதம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இத்துடன், அந்த சூறாவளியால் அம்மாகாணத்தின் 8,046 கி.மீ. நீளத்திற்கு உள்நாட்டு சாலைகள் சேதமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச... மேலும் பார்க்க

டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்: விக்ரமராஜா

சேலம் : டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சேலம் ... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சென்னை: தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்

சென்னை: பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம... மேலும் பார்க்க

ஏப். 6-ல் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வா் திறந்து வைக்கிறாா்!

நீலகிரி: நாட்டிலேயே முதன் முறையாக பழங்குடியினா்களுக்கு என 50 படுக்கை வசதிகளுடன், மலை பிரதேசத்தில் அதிநவீன 700 படுக்கைகள் கொண்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்வர் மு.க.... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் போராட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் திமுக தோ்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க