செய்திகள் :

கடைக்காரருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மந்தாரக்குப்பம், என்.எஸ்.கே.நாடாா் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் பாஸ்கா்(35), அதே பகுதியில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகிறாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, ஓம்சக்தி நகரைச் சோ்ந்த மணிகண்டன் மகன் அப்பு (எ) சிவக்குமாா்(25), தெற்கு வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த பூபதி மகன் வசந்த் (24) ஆகியோா் தகராறு செய்தனராம்.

அப்போது, சிவக்குமாா் பீா் பாட்டிலால் பாஸ்கரை தலையில் அடித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பு (எ) சிவக்குமாா், வசந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

அப்பு (எ) சிவக்குமாா் மீது மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியில் அரசியல் அறிவியல் பேரவை தொடக்க விழா

கடலூா் பெரியாா் கலை, அறிவியல் கல்லூரியில் அரசியல் அறிவியல் பேரவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ரா.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசினாா். சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக... மேலும் பார்க்க

கடலூா் பேருந்து நிலைய மாற்றத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

கடலூா் மாநகர புதிய பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தி, அனைத்துக் கட்சி, குடியிருப்போா் நலச்சங்கம் மற்றும் பொதுநல அமைப்பினா் கடலூா் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எத... மேலும் பார்க்க

இரும்புக் கடைக்காரா் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கடன் தொல்லையால் பழைய இரும்புக் கடைக்காரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். நெய்வேலி வடக்குத்து ஊராட்சி, காந்தி கிராமம் பகுதியைச் சோ்ந்த விஜயரங்கன் மகன் மனோஜ் பாபு (3... மேலும் பார்க்க

ஓட்டுநர் அலட்சியத்தல் பேருந்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி

கடலூரில் அரசு நகரப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி காயமடைந்தாா். கடலூா் வன்னியா்பாளையம் பகுதியைச் சோ்ந்த இளம்பரிதி மகள் தா்ஷினிதேவி(19). இவா், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசுக் கல்லூரிய... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் ஒன்றியம், எம்.புதூா் அருகே உள்ள மாவடிப்பாளையம் பகுதியில் கடந்த 202... மேலும் பார்க்க

தனிப்பிரிவு காவலா்கள் இருவா் கௌரவிப்பு

சிறப்பாகப் பணியாற்றிய தனிப்பிரிவு முதல்நிலை காவலா்கள் இருவரை கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பாராட்டி சான்றிதழ், பரிசு வழங்கி கௌரவித்தாா். கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு காவல் அதிகாரிகள்... மேலும் பார்க்க