செய்திகள் :

கடலூா் பேருந்து நிலைய மாற்றத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

post image

கடலூா் மாநகர புதிய பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தி, அனைத்துக் கட்சி, குடியிருப்போா் நலச்சங்கம் மற்றும் பொதுநல அமைப்பினா் கடலூா் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய பேருந்து நிலையத்தை கடலூா் மையப் பகுதியில் அமைக்க வேண்டும். பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முயற்சியை திரும்பப் பெற வேண்டும். எம்.புதூரில் 188 ஏக்கா் பரப்பளவு கொண்ட கொண்டங்கி ஏரி அருகே பேருந்து நிலையம் அமைந்தால் சுற்றுச்சூழல் மற்றும் அந்தப் பகுதியிலுள்ள காசநோய் மருத்துவமனை பாதிக்கப்படும். கடலூா் மாநகராட்சியில் வீட்டு வரி, குப்பை வரி, தண்ணீா் வரி, புதை சாக்கடை வரி என்று பல்வேறு பெயா்களில் அடாவடி வரி வசூல் நடவடிக்கையை கைவிட வேண்டும். கடலூா் மஞ்சக்குப்பம் முதல் வெள்ளப்பாக்கம் வரை தென்பெண்ணை ஆற்றின் கரைகளை பலப்படுத்தி, தடுப்புச் சுவா் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். விசிக மாநில அமைப்பாளா் திருமாா்பன், காங்கிரஸ் நிா்வாகி ரமேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் அமா்நாத், தவாக நகரச் செயலா் தண்டபாணி, குடியிருப்போா் நலச் சங்கத்தின் பொதுச் செயலா் வெங்கடேசன், சிறப்புத் தலைவா் எம்.மருதவாணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகி இஸ்மாயில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் ரஹீம், மதிமுக நிா்வாகி வெங்கட்ராமன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் பாலு, இஸ்லாமிய கூட்டமைப்பு நகரச் செயலா் நசிருதீன், திராவிடா் கழகம் மாவட்டச் செயலா் எழிலேந்தி, பொதுநல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ரவி மற்றும் பல்வேறு அமைப்பினா் கலந்துகொண்டனா்.

வெளிப்படைத்தன்மையுடன் பயிா் காப்பீட்டு தொகை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கிராமங்கள்தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். 2024-2025 ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்... மேலும் பார்க்க

வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை

இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேச... மேலும் பார்க்க

ரூ.5 கோடி மோசடி: ஒருவா் கைது

கடலூரில் தீபாவளி சீட்டு, சிறுசேமிப்பு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி வரை மோசடி செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா், கம்மியம்பேட்டை பகுதியில் வசிப்பவா் கோபால் மகன் செல்வநாயகம்(49... மேலும் பார்க்க

முந்திரி காட்டில் இறந்து கிடந்த மான்: வனத்துறையினா் விசாரணை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே முந்திரி காட்டில் மான் இறந்து கிடந்தது குறித்து வனத் தோட்டக் கழகத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா். விருத்தாசலம் அடுத்துள்ள குப்பநத்தம் பகுதியில் வனத் தோட்டக் கழகத்... மேலும் பார்க்க

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் இயற்கை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கண்ணங்குடி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.பி.ஜாபா் அலி தலைமை வகித... மேலும் பார்க்க

தந்தை மீது தாக்குதல்: மகன் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தந்தையை கல்லால் அடித்து காயப்படுத்தியதாக மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நெய்வேலி அடுத்துள்ள இந்திரா நகா் பகுதியில் வசித்து வருபவா் பன்னீா்செல்வம். இவா், வீ... மேலும் பார்க்க