செய்திகள் :

Tax: ``உங்கள் வாதமே தவறானது; திசை திருப்பாதீர்கள்..'' - திமுகவுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

post image

சென்னையில் நடந்த மத்திய பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டதுடன், திமுக அரசு வைக்கும் விமர்சனங்களுக்கு எதிராகப் பேசினார்.

உங்கள் வாதமே தவறானது..

நிர்மலா சீதாராமன், "தமிழ் நாட்டில் இருந்து நாங்கள் அதிக வரிப்பணம் தருகிறோம். நாங்கள் தரும் ஒரு ரூபாய் வரிக்கு 7 பைசா தான் பெறுகிறோம்... போன்ற வாதங்களை வைக்கின்றனர். இந்த நம்பர் (தரவுகள்) எல்லாம் எங்கிருந்து கிடைக்கிறதோ தெரியவில்லை.

நிர்மலா சீதாராமன்

உங்களுக்கு கொடுக்கப்படும் ரோடு, மெட்ரொ எல்லாம் எங்கிருந்து வருகிறது? நாட்டில் அதிகமாக உற்பத்தி இணைப்பு ஊக்குவிப்பு (Productive Linked Incentive - PLI) இங்குதான் கொடுக்கப்படுகிறது.

"இந்தியாவின் 25% எலக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனங்கள் இங்குதான் இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் PLI வருகிறது, அது எங்கிருந்து வருகிறது?

ஜனரஞ்சகமாக நாங்கள் இவ்வளவு கொடுக்கிறோம், எங்களுக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்ற வாதமே தவறானது. அவர்களது கால்குலேஷன் எங்கிருந்து வருகிறது என்றே எனக்குப் புரியவில்லை." எனப் பேசினார்.

நிர்மலா சீதாராமன்

சென்னை, கோயம்புத்தூரை சுட்டிக்காட்டிய Nirmala Sitharaman

"இங்கு கோயம்புத்துர்காரர்களும் சென்னைக்காரர்களும் இருக்கிறீர்கள். தமிழ்நாட்டுக்கு அதிகம் வரிகொடுப்பது கோயம்புத்தூரும் சென்னையும் தான்.

இப்போது கோவில்பட்டிகாரர்கள் எங்களுக்கு என்ன செய்தீர்கள் எனக் கேட்கும்போது, கோயம்புத்தூர்காரர்கள், நாங்கள்தான் வரிகொடுத்தோம், எங்களுக்குத்தான் திருப்பி கொடுக்க வேண்டும் எனக் கேட்க வேண்டுமா? 'கோவில்பட்டி எக்கேடு கேட்டால் எனக்கென்ன, அவர்களுக்கு செலவு செய்யக் கூடாது' என சொல்லணுமா? அப்படிப்பட்ட கொள்கை இல்லை பாரத நாட்டில்." என்கிறார்.

தொகுதி மறுசீரமைப்பு கூடட்டம்

மும்மொழிக் கொள்கை, தொகுதி வரையறை

"அதனால் இதுபோல குதர்க்கமாக பேசுபவர்கள் நான் பட்டியலிடுபவற்றை கூட்டிக்கழித்து பார்த்துவிட்டு சொல்ல வேண்டும், எவ்வளவு கொடுத்திருக்கிறோம் என்று.

தமிழ்நாட்டுக்கு செய்யவேண்டியவை எத்தனையோ இருந்தாலும், மும்மொழிக் கொள்கை, தொகுதிவரையறை என திசை திருப்பும் வேலைகளை செய்கின்றனர். நாங்கள் மத்திய அரசின் சார்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவோ செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்." எனப் பேசியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`முன்னிறுத்தப்பட்ட இந்தி; புறக்கணிக்கப்பட்ட கன்னட மொழி' - வைரலாகும் பெங்களூர் RSS நிகழ்ச்சி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கல... மேலும் பார்க்க

Parliament: பதாகைகளை ஏந்தி எதிக்கட்சிகள் கடும் அமளி; மக்களவை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வார விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. மக்களவையிலும் - மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவையில், தொகுதி மறு சீர... மேலும் பார்க்க

மதுரை: ``இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்'' - த.வா.க வேல்முருகன் சொல்வது என்ன?

நாம் தமிழர் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய வெற்றிக்குமரன் தன்னுடைய அமைப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சி மதுரையில் நடந்தது.அதில் கலந்துகொள்ள வந்திருந்... மேலும் பார்க்க

Kerala BJP: கேரள பாஜக தலைவராகும் ராஜீவ் சந்திரசேகர்; கர்நாடகா டு கேரள அரசியல் என்ட்ரி! - யார் இவர்?

கேரள மாநில பா.ஜ.க தலைவராக இருக்கும் கே.சுரேந்திரனின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. மாநில தலைவர் பதவிக்காக மாநில நிர்வாகிகள் எம்.டி.ரமேஷ், ஷோபா சு... மேலும் பார்க்க

``டிரம்ப் கொடுத்த நெருக்கடி'' - பதவியேற்றதும் நாடாளுமன்றத்தை கலைப்பது ஏன்? கனடா பிரதமர் விளக்கம்!

ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பின், கனடா பிரதமராக மார்க் கார்னே பதவியேற்று கிட்டதட்ட 10 நாள்கள் தான் ஆகியுள்ளது. அதற்குள், அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளார்.கன... மேலும் பார்க்க

Nitish Kumar: நிதிஷ் குமார் இஃப்தார் விருந்தை முஸ்லிம் அமைப்புகள் புறக்கணித்தது ஏன்?

வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2024-ஐ ஆதரித்ததற்காக, பீகார் முதல்வரும் ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் நடத்திய இப்தர் நிகழ்வை முக்கிய முஸ்லிம் அமைப்புகள் புறக்கணித்திருக்கின்றன. மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஆ... மேலும் பார்க்க