செய்திகள் :

KKR vs RCB: ``இந்த அணிக்கு வந்து 10 நாள்கள்தான் ஆகிறது; அதற்குள்..'' - ஆட்டநாயகன் குர்னல் பாண்டியா

post image

ஐபிஎல் 18-வது சீசன் நேற்று ( மார்ச் 22) கோலாகலமாகத் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்(KKR), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்(RCB) மோதின. இதில் கொல்கத்தா அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆர்சிபி அணியின் இந்த வெற்றிக்கு குர்னல் பாண்டியா முக்கிய பங்காற்றி இருந்தார்.

 குர்னல் பாண்டியா
குர்னல் பாண்டியா

இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய குர்னல் பாண்டியா, "இன்றைய போட்டியில் அணியின் வெற்றிக்காக உதவியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆர்சிபி அணிக்காக விளையாடுவது அபாரமாக இருக்கின்றது. ஆட்டம் செல்லும் திசை நோக்கி நாமும் செல்ல வேண்டும். இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு முன்பு நாங்கள் விளையாடும் போது எங்களுடைய கவனத்தை நாங்கள் சுருக்கி கொண்டு பந்துவீச்சில் மட்டும்தான் முழு கவனத்தையும் வைத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து சிக்சர்களை அடிக்கும் வகையில் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய திறமையை வளர்த்து வருகிறார்கள். எனவே பவுலர்களும் அதற்கு ஏற்ற மாதிரி தங்களுடையத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் தான் நான் பந்துகளின் வேகத்தை அதிகப்படுத்தினேன். நான் ஆர்சிபி அணிக்குள் வந்த உடனே இந்த அணிக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

 குர்னல் பாண்டியா
குர்னல் பாண்டியா

ரசிகர்கள் பெரும் அளவு எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நான் பெங்களூருவில் சாதாரண உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட வந்தாலே அங்கு இருக்கும் ரசிகர்கள் ஆர்சிபி, ஆர்சிபி என்று கத்துவார்கள். நான் இந்த அணிக்கு வந்து பத்து நாள்கள் தான் ஆகிறது. அதற்குள் எனக்கு இந்த அணி மிகவும் பிடித்துவிட்டது" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Dhoni: "தோனிக்காக விட்டுக்கொடுப்பேன் என ரசிகர்கள் நம்பினர்; ஆனா..." - வின்னிங் ஷாட் குறித்து ரச்சின்

ஐ.பி.எல் 18-வது சீசனின் மூன்றாவது போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது. ருத்துராஜ் தலைமையிலான சென்னை அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணியும் மோதிக்கொண்ட இந்த ஆட்டத... மேலும் பார்க்க

DC vs LSG: முதல் போட்டியிலேயே கே.எல்.ராகுல், நடராஜன் இல்லை... டெல்லிக்கு எதிராகத் தயாரான பண்ட்!

ஐபிஎல் 18-வது சீஸனின் நான்காவது போட்டி விசாகப்பட்டினத்தில் டெல்லி கேபிடல்ஸ் (DC), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணிகளுக்கு இடைய இன்று மாலை 7:30 மணியளவில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் க... மேலும் பார்க்க

Dhoni: "ருத்துராஜைப் பெயருக்குத்தான் கேப்டனாக வைத்திருக்கிறோமா?" - விமர்சனங்களுக்குத் தோனி பதில்

ஐ.பி.எல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், அதை ஒளிபரப்பும் JioStar நிறுவனத்துக்குத் தோனி பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், ருத்துராஜூக்குப் பதில் தோனிதான் கேப்டன்சி செய்கிறார். ருத்துராஜ்... மேலும் பார்க்க

Khaleel Ahmed: `பந்தை சேதப்படுத்த முயன்றாரா கலீல் அஹமது?' - பரவும் வீடியோவும் லாஜிக்கும்

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. அந்தப் போட்டியின்போது சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமது கையில் எதோ ஒரு பொருளை வைத்து பந்தை சே... மேலும் பார்க்க

Noor Ahmad: `மஹி பாய் போன்ற ஒருவர் ஸ்டம்புக்கு பின்னால் நிற்பது.!’ - முதல்போட்டி குறித்து நூர் அகமது

ஐபிஎல் வரலாற்றில் எப்போதும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக விளங்கும் சென்னை (CSK) vs மும்பை (MI) போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்க... மேலும் பார்க்க

Vignesh Puthur: `ஆலப்புழா டு தென்னாப்பிரிக்கா' - விக்னேஷை மும்பை அணி எப்படி கண்டுபிடித்தது தெரியுமா?

சேப்பாக்கத்தில் சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோற்றிருக்கிறது. ஆனாலும் மும்பை அணியின் விக்னேஷ் புத்தூர் எனும் இளம் வீரர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அறிமுகப் போட்டியிலேயே ருத்துராஜ... மேலும் பார்க்க