செய்திகள் :

கும்பகோணம்: ரௌடியைக் கொலை செய்த அண்ணன் கைது!

post image

கும்பகோணத்தில் ரௌடி காளிதாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி பகுதியில் ரௌடியாக இருந்து வந்த காளிதாஸ் (35), இன்று அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டின்முன் கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், காளிதாஸின் உடல் கைப்பற்றப்பட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அடிதடி வழக்கில் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்த காளிதாஸ் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதால், இந்தக் கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்டதா அல்லது சொத்து தகராறா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதையும் படிக்க:காவலர்களின் என்கவுன்டரில் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட குற்றவாளி சுட்டுக்கொலை!

இதனிடையே, காளிதாஸின் சகோதரர் பாண்டியனிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், காளிதாஸை பாண்டியன் கொலை செய்தது தெரிய வந்தது.

குடிபோதைக்கு ஆளான காளிதாஸ், குடும்பத்தைச் சரிவர கவனிக்காததைக் கண்டிக்கச் சென்ற பாண்டியனுக்கும் காளிதாஸுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின்போது, தற்காப்புக்காக காளிதாஸின் தலையில் மரக்கட்டையால் பாண்டியன் தாக்கினார்.

இந்தத் தாக்குதலில் காளிதாஸ் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, பாண்டியன் கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக மாணவா்கள் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் புலமை பெற்றுள்ளனா்: ஔவை ந.அருள்

தமிழக மாணவா்கள் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் புலமை பெற்றவா்களாக உள்ளனா் என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை ந.அருள் தெரிவித்துள்ளாா். சென்னை, அண்ணா நகரில் உள்ள கொ.கந்தசாமி நாயுடு கல்லூரியில் தம... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைய விடமாட்டோம்! -முதல்வர் ஸ்டாலின்

சென்னை : நாடாளுமன்றத்தில் தென் மாநில மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க விடமாட்டோம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு. க. ஸ்டாலின் தமது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

திருச்சி - சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

திருச்சி - சென்னை தாம்பரம் இடையே 3 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 29, 30, 31 ஆகிய நாள்களில் காலை 5.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படு... மேலும் பார்க்க

மார்ச் 28-ல் தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி மார்ச் 28-ல் தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து... மேலும் பார்க்க

தவெக பொதுக்குழு கூட்டம் - குழு அமைப்பு

மார்ச் 28ஆம் தேதி நடக்கவுள்ள தவெக பொதுக்குழு கூட்டப் பணிகளை மேற்கொள்ள அக்கட்சி சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி வரவேற்புக் குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மைக் குழு, தொழில்நுட்பக் குழு ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை: அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலை சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். இன்று நடைபெறும் கூட்டம் வெறும் ந... மேலும் பார்க்க