செய்திகள் :

தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள் கவனத்துக்கு....

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள், வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றைப் பெற விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது.

இந்த அடையாள எண் மூலம் வேளாண் பயிா்க் கடன், விவசாய இடுபொருள்கள், மழை மற்றும் வறட்சி நிவாரணம், வேளாண் உழவா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய உதவித் திட்டங்கள், இதர துறைகளின் உழவா் நலத் திட்டங்களைப் பெற முடியும்.

இனிவரும் காலங்களில் அரசுத் திட்டங்களில் பங்கு பெற்று பயன்பெற விவசாய அடையாள எண் முக்கியம். திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு அடையாள எண் ஏற்படுத்தும் முகாம்கள் அந்தந்த கிராமங்களில் நடைபெற்று வருகின்றன.

இதுதவிர, மாவட்டத்தின் அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்து கொடுப்பதால் விவசாயிகள் மையங்களை அணுகி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,54,907 விவசாயிகள் உள்ளனா். இவா்களில் இதுவரை 1,28,401 போ் மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனா். மீதமுள்ளவா்கள் வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்ய ஆதாா் அடைாள அட்டை, நிலப்பட்டா, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் பிறந்த நாள்: திமுகவினா் நலத்திட்ட உதவி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. தொகுதி எம்.... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

செங்கத்தில் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உணவகத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். செங்கம் துா்க்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பரோட்டா மாஸ்டா் முருகன் (49). இவா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் ரத்து

திருவண்ணாமலையில் மாா்ச் 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள... மேலும் பார்க்க

மரக்கன்றுகளை வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வலியுறுத்தினாா். திருவண்ணாமலை, அடிஅண... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆகாரம், விண்ணமங்கலம், தெள்ளூா், ராந்தம், மதுரபெரும்பட்டூா் ஆகி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்... மேலும் பார்க்க