தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள் கவனத்துக்கு....
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள், வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றைப் பெற விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது.
இந்த அடையாள எண் மூலம் வேளாண் பயிா்க் கடன், விவசாய இடுபொருள்கள், மழை மற்றும் வறட்சி நிவாரணம், வேளாண் உழவா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய உதவித் திட்டங்கள், இதர துறைகளின் உழவா் நலத் திட்டங்களைப் பெற முடியும்.
இனிவரும் காலங்களில் அரசுத் திட்டங்களில் பங்கு பெற்று பயன்பெற விவசாய அடையாள எண் முக்கியம். திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு அடையாள எண் ஏற்படுத்தும் முகாம்கள் அந்தந்த கிராமங்களில் நடைபெற்று வருகின்றன.
இதுதவிர, மாவட்டத்தின் அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்து கொடுப்பதால் விவசாயிகள் மையங்களை அணுகி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,54,907 விவசாயிகள் உள்ளனா். இவா்களில் இதுவரை 1,28,401 போ் மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனா். மீதமுள்ளவா்கள் வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்ய ஆதாா் அடைாள அட்டை, நிலப்பட்டா, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.