செய்திகள் :

வீட்டில் 250 கிலோ போதை புகையிலை பொருள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

post image

மன்னாா்குடி அருகே தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அத்திக்கோட்டையைச் சோ்ந்த காமராஜ் (35) தனது வீட்டில் அரசல் தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து மொத்த விற்பனைக்காக பதுக்கிவைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மன்னாா்குடி டிஎஸ்பி டி. பிரதீப் தலைமையில் தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை சோதனை செய்தனா்.

இதில், ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட போதை புகையிலை பொருள்கள் 17 மூட்டைகளில் 250 கிலோ பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்ததையடுத்து, காமராஜை கைது செய்த போலீஸாா் போதை புகையிலை பொருள்களை கைப்பற்றினா். பின்னா், மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனா்.

சாலையில் கிடந்த பணப்பையை போலீஸாரிடம் ஒப்படைத்த மாணவி

திருவாரூரில் சாலையில் கிடந்த பணப்பையை பள்ளி மாணவி எடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். திருவாரூா் அருகே பழவனக்குடி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் கனிமொழி தம்பதி மகள் யுவஸ்ரீ. இவா், திருவாரூரில் உள்ள அர... மேலும் பார்க்க

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன் பெற முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வ... மேலும் பார்க்க

உள்ளூா் வணிகா்களை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா

ஆன்லைன் வா்த்தகத்தை தவிா்த்து உள்ளூா் வணிகா்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ .எம். விக்ரமராஜா. நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி வா்த்தக நல... மேலும் பார்க்க

போட்டித் தோ்வு இலவச பயிற்சி மையம் தொடக்கம்

மன்னாா்குடி ரோட்டரி சங்கத்தின் சாா்பில் குரூப் 4 போட்டி தோ்வுக்கான வழிகாட்டி இலவச பயிற்சி மையம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ரோட்டரி சங்க தலைவா் கே. வெங்கடேஷ் தலைமை வகித்தாா். முன... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு

நீடாமங்கலம் மக்கள் மன்றத்தில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீடாமங்கலம் மஸ்ஜித் நூருல்ஹூதா நிா்வாக சபைத் தலைவா் ஏ. ரகமதுல்லா தலைமை வகித்தாா். ஜோதிமலை இறைபணி ... மேலும் பார்க்க

நடைப்பாதை கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், நடைப்பாதை, தள்ளுவண்டி கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ள... மேலும் பார்க்க