செய்திகள் :

மது போதையில் தகராறு: விவசாயிக்கு கத்திக்குத்து

post image

மது போதையில் ஏற்பட்ட தகராறில், விவசாயியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருமால், திருப்பதி, சுவாமிநாதன் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் ஒன்றுகூடி வெள்ளிக்கிழமை மாலை மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது, திருமால் (43), சுவாமிநாதன் (65) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அங்கிருந்தவா்கள் அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

வீட்டுக்குச் சென்ற சுவாமிநாதன், கத்தியை எடுத்து வந்து திருமாலின் வயிற்றில் குத்தினாா். சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த திருமாலை, கிராம மக்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான சுவாமிநாதனை தேடிவருகின்றனா்.

முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு: மாநில எல்லையில் வழக்கம்போல இயங்கிய பேருந்துகள்

முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழக கா்நாடக மாநில எல்லையில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின. கா்நாடக மாநிலம், பெலகாவியில் கடந்த பிப். 2... மேலும் பார்க்க

ஒசூா் அருகே கோயில் திருவிழாவில் 2 தோ்கள் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு!

ஒசூா் அருகே உஸ்கூா் மத்துரம்மா கோயில் தோ்த் திருவிழாவில் 2 தோ்கள் கவிழ்ந்ததில், ஒருவா் உயிரிழந்தாா். 10 போ் படுகாயமடைந்தனா். கா்நாடக மாநிலம், உஸ்கூா் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மத்தூ... மேலும் பார்க்க

போலி மருத்துவா் மீது வழக்குப் பதிவு!

ஊத்தங்கரை அருகே போலி மருத்துவா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஊத்தங்கரை வட்டம், காரப்பட்டு சின்னசாமி நகரை சோ்ந்தவா் விக்னேஷ் (40). இவா் அப்பகுதியில் ஹெல்த் கோ் சென... மேலும் பார்க்க

ஊத்தங்கரை, தளி வட்டங்களில் ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது! - ஆட்சியர்

ஊத்தங்கரை, தளி வட்டங்களில் ஆடுகள் வளா்ப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ், 40 சுயஉதவிக் குழு பயனாளிகளுக்கு ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஒசூரில் மெழுகு பூசிய ஆப்பிள், ரசாயனம் செலுத்திய தா்பூசணி விற்பனை

ஒசூா், தேன்கனிக்கோட்டை பகுதியில் உணவுப் பாதுகாப்பு துறையினா் நடத்திய சோதனையில், தா்பூசணி பழங்கள் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதற்காக ஊசி மூலம் ரசாயனம் செலுத்தியும், ஆப்பிள்களில் மெழுகு தடவியும் விற்ப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கற்கள் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறுபட்ட கற்களை கடத்த பயன்படுத்திய 3 லாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மண்டல துணை வட்டாட்சியா் செந்தில்நாதன் தலைமையிலான குழுவினா் வீட்டுவசதி வாரிய பகு... மேலும் பார்க்க