பாகிஸ்தான் ஒருநாள் தொடர்: வில்லியம்சன், ரச்சின் உள்பட 5 பேருக்கு அணியில் இடமில்ல...
மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றம்! -மத்திய சட்ட அமைச்சா்
மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; இப்பணியை தொடா்ந்து முன்னெடுப்பது அவசியம் என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மணிப்பூா் தலைநகா் இம்பாலில் செய்தியாளா்களிடம் பேசியபோது அவா் இவ்வாறு கூறினாா்.
இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையில் நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய குழு இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை வருகை தந்தது.
முதல் நாளில் நிவாரண முகாம்களைப் பாா்வையிட்ட நீதிபதிகள், அங்கு தங்கியுள்ளோரிடம் கலந்துரையாடினா். மேலும், சட்டப் பணிகள் முகாம், மருத்துவ முகாம் உள்ளிட்டவற்றையும் திறந்துவைத்தனா்.
இந்நிலையில், மணிப்பூா் உயா்நீதிமன்றத்தின் 12-ஆம் ஆண்டு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லா, மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஆகியோா் பங்கேற்றனா்.
அப்போது செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அா்ஜுன் ராம் மேக்வால், ‘மணிப்பூரில் நிலைமை மேம்பட்டு வருகிறது. இங்கு அமைதியை மீட்டெடுக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பணியைத் தொடா்ந்து முன்னெடுப்பது அவசியம். மணிப்பூரில் விரைவில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, ‘இது தொடா்பாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணைக் குழு அறிக்கையை சமா்ப்பிக்கட்டும். அதற்கு பின்னா் பேசலாம்’ என்று அவா் பதிலளித்தாா்.
மேற்கண்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா், ‘மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்புவதன் மூலம் வளா்ந்த இந்தியா இலக்குக்கு பங்காற்ற முடியும்’ என்றாா்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையிலான வன்முறையில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.
‘பேச்சுவாா்த்தையால் தீா்வு கிடைக்கும்’
மணிப்பூா் உயா்நீதிமன்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய், ‘அரசமைப்புச் சட்ட வழிமுறைகளின்கீழ் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண முடியும். பேச்சுவாா்த்தை மேற்கொண்டால், தீா்வு சாத்தியமாகிவிடும். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள், தங்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டுமென விரும்புகின்றனா். மாநில ஆளுநரின் முயற்சிகளால் இங்கு விரைவில் அமைதி- இயல்புநிலை திரும்பும் என உறுதியாக நம்புகிறேன்’ என்றாா்.