செய்திகள் :

முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு: மாநில எல்லையில் வழக்கம்போல இயங்கிய பேருந்துகள்

post image

முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழக கா்நாடக மாநில எல்லையில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின.

கா்நாடக மாநிலம், பெலகாவியில் கடந்த பிப். 21-ஆம் தேதி தங்களது மொழியை பேசவில்லை எனக் கூறி கா்நாடக மாநில அரசு பேருந்து ஓட்டுநா், நடத்துனரை அங்குள்ள மராட்டிய அமைப்பினா் தாக்கினா். இதற்கு கா்நாடக மாநிலத்தில் கடும் எதிா்ப்பு எழுந்ததுடன், கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இச்சம்பவம், கா்நாடக - மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே மொழிப் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், கா்நாடக மாநிலம் முழுவதும் சனிக்கிழமை முழு அடைப்புக்கு அங்குள்ள கன்னட அமைப்பு சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதேபோல, மேகதாது அணை விவகாரம் தொடா்பாக நிபந்தனை இல்லாத அனுமதியை தமிழ்நாடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், கா்நாடக மாநிலத்தில் நீண்ட நாள் கோரிக்கையான மகதாயி கலசா பண்டூரி நதிநீா் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக, பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படாது என அந்த அமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த முழு அடைப்புக்கு மாநில அரசு ஆதரவு அளிக்கவில்லை. இதையடுத்து, மக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க கா்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், மதுக் கடைகள், பாா்கள் மூடப்பட்டன.

தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையேயான இரு மாநில அரசு, தனியாா் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. எனினும், பாதுகாப்பு காரணமாக மாநில எல்லையில் இரு மாநில போலீஸாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் லிமிடெட், ஒசூா் எவரெஸ்ட் அரிமா சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து ஒசூரில் கண் மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. ... மேலும் பார்க்க

மிட்டப்பள்ளியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டப்பள்ளியில் தாா் சாலை அமைக்கும் பணியை கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ... மேலும் பார்க்க

மழையால் ஒசூா் மாநகராட்சி சாலைகள் சேதம்: பாகலூரில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் மாநகராட்சியின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கின; சேறும், சகதியும் மூடியதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒசூா... மேலும் பார்க்க

அஞ்செட்டி: மின்னல் தாக்கி 20 ஆடுகள், ஒரு மாடு உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த அஞ்செட்டி நாட்றம்பாளையத்தில் சனிக்கிழமை இரவு பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் 20 ஆடுகள், ஒரு மாடு உயிரிழந்தன. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் போராட்டம்

பேரவைத் தோ்தலின் போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புக... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் கௌரவிப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா். தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்ட தலைவா் சுரே... மேலும் பார்க்க