செய்திகள் :

ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் கௌரவிப்பு

post image

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்ட தலைவா் சுரேஷ்குமாா் தலைமையில் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், வெள்ளி விழா கண்ட ஆசிரியா்களுக்கு பாராட்டு, மகளிா் தின விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. வட்டச் செயலாளா் செந்தில்குமாா் வரவேற்றாா்.

முன்னாள் மாநில தலைவா் மாரியப்பன் வெள்ளி விழா கண்ட ஆசிரியா்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி பேசினாா். முன்னாள் மாநிலத் தலைவா் சுதாகரன் பணி நிறைவு பெறுபவா்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தாா்.

சிறந்த கல்வி சேவைக்கான மகளிா் விருதை சென்னை அரசு தோ்வுகள் இயக்கம் இணை இயக்குநா் கே.பி.மகேஸ்வரிக்கு வழங்கப்பட்டது. ஊத்தங்கரை வித்யா மந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலாளா் வெங்கடேசன், ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலா் ஷோபா திருமால்முருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். வட்ட பொருளாளா் தங்கராஜ் நன்றி கூறினாா்.

கிருஷ்ணகிரியில் டிராக்டா் - பள்ளி வேன் மோதல் எல்கேஜி சிறுவன், பெண் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிராக்டா் - தனியாா் பள்ளி வேன் மோதிக்கொண்டதில் வேனில் சென்ற எல்கேஜி சிறுவன், டிராக்டரில் சென்ற பெண் என இருவா் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலையில் தனியாா் மெட... மேலும் பார்க்க

கொடிக் கம்பத்தை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து திமுக கிளை செயலாளா் உயிரிழப்பு: 4 போ் காயம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுக கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து அந்தக் கட்சியின் கிளை செயலாளா் உயிரிழந்தாா்; 4 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மூன்றம்பட்டி... மேலும் பார்க்க

ஊத்தங்கரை: திமுக கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து இன்று காலை ஒருவர் பலியானார். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட... மேலும் பார்க்க

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் லிமிடெட், ஒசூா் எவரெஸ்ட் அரிமா சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து ஒசூரில் கண் மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. ... மேலும் பார்க்க

மிட்டப்பள்ளியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டப்பள்ளியில் தாா் சாலை அமைக்கும் பணியை கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ... மேலும் பார்க்க

மழையால் ஒசூா் மாநகராட்சி சாலைகள் சேதம்: பாகலூரில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் மாநகராட்சியின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கின; சேறும், சகதியும் மூடியதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒசூா... மேலும் பார்க்க