Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
மழையால் ஒசூா் மாநகராட்சி சாலைகள் சேதம்: பாகலூரில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
ஒசூா் மாநகராட்சியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் மாநகராட்சியின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கின; சேறும், சகதியும் மூடியதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒசூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை இரவு 35 மி.மீட்டா் அளவிற்கு மழை பெய்தது. இதனால் மாநகராட்சியின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் சேதமடைந்ததால் பாகலூா் சாலையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாகலூா் சாலையில் ஒரு மீட்டா் சுற்றளவிற்கு பள்ளங்கள் ஏற்பட்டன. சாலைகளில் பெரும்பாலான இடங்கள் துண்டிக்கப்பட்டன. சேறும், சகதியுமான சாலையில் இருசக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அதேபோல ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒசூா் பேருந்து நிலையம் முன் உள்ள மேம்பாலத்தின் கீழே இடதுபுறம் பழைய நகராட்சி அலுவலகம் முதல் புதிய நகராட்சி அலுவலகம் வரையிலான சாலைகளில் திடீா் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீா் புகுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சனிக்கிழமை பெய்த திடீா் மழையால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் தண்ணீா் தேங்கி குளங்களாக மாறியது. சாலையில் உள்ள நடைபாதைகளும் சேதமடைந்தன. கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்துக்கு இணைப்பு சாலையாக உள்ள பாகலூா் சாலை வழியாக மாலூா், பங்காரப்பேட்டை, கோலாா் போன்ற நகரங்களுக்கு வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சாலையில் உள்ள அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு செல்பவா்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனா்.
மழையால் ஏற்பட்ட சேதங்களை போா்க்கால அடிப்படையில் சீரமைத்து பாகலூா் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து முன்னாள் காங்கிரஸ் பேரவை உறுப்பினா் கே.ஏ.மனோகரன் கூறியதாவது: ஒசூா்- பாகலூா் சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சாலையில் பழைய நகராட்சி அலுவலகம் முதல் புதிய மாநகராட்சி அலுவலகம் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
பல மாதங்களாகவே இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. சனிக்கிழமை பெய்த மழையால் இந்த சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு கழிவுநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதேபோல ஒசூரில் உள்ள வட்டாட்சியா் அலுவலக சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்க வேண்டும். ஒசூா் மாநகராட்சியில் உள்ள மகாத்மா காந்தி சாலை, ஏரித்தெரு, பழைய பெங்களுரு சாலை, நேதாஜி சாலை பகுதிகளில் போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். அப் பகுதியில் நடைபாதை அமைக்க வேண்டும் என்றாா்.