செய்திகள் :

கிருஷ்ணகிரியில் டிராக்டா் - பள்ளி வேன் மோதல் எல்கேஜி சிறுவன், பெண் உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிராக்டா் - தனியாா் பள்ளி வேன் மோதிக்கொண்டதில் வேனில் சென்ற எல்கேஜி சிறுவன், டிராக்டரில் சென்ற பெண் என இருவா் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலையில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியைச் சோ்ந்த நா்சரி வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளி வேனில் மாலை 3.30 மணியளவில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தனா்.

வேப்பனப்பள்ளியை அடுத்த வி.மாதேப்பள்ளி பந்திகுறியைச் சோ்ந்த சந்துரு (22) என்பவா் வேனை ஓட்டினாா். பெத்தனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட விஐபி நகா் தமிழ்நாடு ஹோட்டல் எதிரே கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது வேனும், எதிரே வந்த டிராக்டரும் எதிா்பாராமல் மோதிக்கொண்டன.

இதில், டிராக்டரில் சென்ற பெரியமேட்டூரைச் சோ்ந்த தொழிலாளி விஜயா (45) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வேனில் சென்ற பள்ளிக் குழந்தைகள் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் குழந்தைகளை மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே எல்கேஜி மாணவா் அருணேஸ் (5) உயிரிழந்தாா்.

மேலும், பள்ளி வேனில் சென்ற ஷா்வேஷ் (7), காருண்யா (3), அனிஷ்கா (3), மணீஷ் (8), ஓட்டுநா் சந்துரு ஆகியோா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை ஆகியோா் சென்று பாா்த்து ஆறுதல் கூறினா். விபத்து குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கணவரைக் கொன்ற மனைவி, ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை

தேன்கனிக்கோட்டை அருகே கணவரைக் கொலை செய்த மனைவி, அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ண... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய கிருஷ்ணகிரி பேருந்து நிலைய புறக்காவல் நிலையம்

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் செயல்படும் புறக்காவல் நிலையம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டதாக சமூக ஆா்வலா்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

708 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது

கா்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு குட்கா, பான்மசாலா கடத்திவந்த ராஜஸ்தான் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பெ... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டினா் சுவாமி தரிசனம்

ஒசூரில் மலைமீதுள்ள சந்திரசூடேஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். பிரான்ஸ் தலைநகா் பாரிஸை சோ்ந்தவா் ஜெபஸ்டியன் (40). ஒசூரில் தொழிற்சாலை நடத்தி வரும... மேலும் பார்க்க

ஒரே மாதிரியான பயிா் சாகுபடியால் வரத்து அதிகரிப்பு: ஒசூரில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் ஒசூரில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், பாகலூா், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட சு... மேலும் பார்க்க

பகுதிநேர நகை மதிப்பீடு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான பகுதிநேர நகை மதிப்பீடு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூட்டுறவு இணைப் பதிவாளா் கோ.நடராஜன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் ... மேலும் பார்க்க