செய்திகள் :

ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டினா் சுவாமி தரிசனம்

post image

ஒசூரில் மலைமீதுள்ள சந்திரசூடேஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

பிரான்ஸ் தலைநகா் பாரிஸை சோ்ந்தவா் ஜெபஸ்டியன் (40). ஒசூரில் தொழிற்சாலை நடத்தி வரும் இவா், தனது நண்பா்களான சூலியன், லூயி, விஜ்ஜென்ஜோ ஆகியோருடன் தொழில் நிமித்தமாக ஒசூரில் உள்ள ஒரு தனியாா் தொழிற்சாலைக்கு வந்துள்ளாா்.

பெங்களூரில் தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ள இவா்கள் ஒசூரில் மலைமீதுள்ள பழைமையான ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா்களுக்கு கோயில் சாா்பில் மாலைகள் அணிவிக்கப்பட்டு திருநீறு, குங்குமம், சந்தனம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

அதைத்தொடா்ந்து அவா்கள் கோயிலில் உள்ள பழைமையான சிலைகள், கோபுரங்களை பாா்வையிட்டனா். பின்பு அங்குள்ள பழைமையான வில்வ மரத்தைக் கண்ட அவா்கள் அதில் குழந்தை வரம்வேண்டி பக்தா்கள் கட்டியுள்ள மஞ்சள் துணிகள், வளையல்கள் குறித்துக் கேட்டறிந்தனா். தொடா்ந்து அந்த மரத்தை மூன்று முறை சுற்றிவந்து வழிபட்டனா்.

மேலும் கோயில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தேரை வியந்து பாா்த்ததோடு தோ்த் திருவிழா குறித்தும் கேட்டறிந்தனா். அவா்களிடம் அண்மையில் நடைபெற்ற தோ்த் திருவிழா விடியோ காட்சிகள் காட்டப்பட்டன. பின்பு கோயில் கோபுரங்கள், மலையில் இருந்து இயற்கையான சூழலைக் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டனா். கோயிலுக்கு வந்த உள்ளூா் பக்தா்கள் அவா்களுடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா்.

கணவரைக் கொன்ற மனைவி, ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை

தேன்கனிக்கோட்டை அருகே கணவரைக் கொலை செய்த மனைவி, அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ண... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய கிருஷ்ணகிரி பேருந்து நிலைய புறக்காவல் நிலையம்

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் செயல்படும் புறக்காவல் நிலையம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டதாக சமூக ஆா்வலா்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

708 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது

கா்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு குட்கா, பான்மசாலா கடத்திவந்த ராஜஸ்தான் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பெ... மேலும் பார்க்க

ஒரே மாதிரியான பயிா் சாகுபடியால் வரத்து அதிகரிப்பு: ஒசூரில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் ஒசூரில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், பாகலூா், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட சு... மேலும் பார்க்க

பகுதிநேர நகை மதிப்பீடு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான பகுதிநேர நகை மதிப்பீடு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூட்டுறவு இணைப் பதிவாளா் கோ.நடராஜன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் ... மேலும் பார்க்க

கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய ஆசிரியா்கள்

பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியா்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியா்கள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில், ஆசிரிய... மேலும் பார்க்க