செய்திகள் :

கணவரைக் கொன்ற மனைவி, ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை

post image

தேன்கனிக்கோட்டை அருகே கணவரைக் கொலை செய்த மனைவி, அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த உனிசெட்டியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (37). மினிலாரி ஓட்டுநா். இவரது மனைவி ரூபா (25). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்த நிலையில் ரூபாவுக்கும், சூலகுண்டா அருகே மஞ்சுகிரி கிராமத்தைச் சோ்ந்த தங்கமணிக்கும் (20) பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னா் தங்கமணியுடன் ரூபா சென்றுவிட்டாா். குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஐயப்பன் மனைவியிடம் சென்று அடிக்கடி தகராறு செய்துவந்தாா்.

இதனால் ரூபாவும், தங்கமணியும் சோ்ந்து கடந்த 2021, அக். 21 ஆம் தேதி இரவு மதுபோதையில் இருந்த ஐயப்பனை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அவா் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் ரூபாவும், தங்கமணியும் சோ்ந்து ஐயப்பனைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி சந்தோஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றவாளிகளான ரூபா, தங்கமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 4000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சின்ன பில்லப்பா வாதாடினாா்.

ஒசூரில் ஆதரவற்றோா் தங்கும் இல்லத்தில் மேயா் ஆய்வு

ஒசூா் மாநகராட்சியில் ஆதரவற்றோா் தங்கும் இல்லத்தில் மேயா் எஸ்.ஏ.சத்யா புதன்கிழமை ஆய்வுசெய்தாா். ஒசூா் மாநகராட்சி, தேசிய நகா்ப்புற வாழ்வாதார ஆராதனை, சமூகசேவை மற்றும் திறன் மேம்பாட்டு அறக்கட்டளை நடத்தும்... மேலும் பார்க்க

வேதிப்பொருள்களை பயன்படுத்தி பழங்களை பழுக்கவைத்தால் நடவடிக்கை

செயற்கை வேதிப்பொருள்களை பயன்படுத்தி பழங்களை பழுக்கவைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மின்மாற்றியிலிருந்து செம்புக் கம்பி திருட்டு

கந்திகுப்பம் அருகே மின்மாற்றியிலிருந்து 40 கிலோ செம்புக் கம்பியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கந்திகுப்பத்தை அடுத்த சிந்தகம்பள்ளி அருகே உள்ள எட்டிக்குட்டை கிராமத்தில் மின்மாற்றியிலிருந்த 40 கிலோ செ... மேலும் பார்க்க

வெயில் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடை வெயில் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து அரசு துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தினாா். இதுதொடா்பாக அனைத்துத் துறை அலுவல... மேலும் பார்க்க

அனுமன்தீா்த்தத்தில் இளைஞா் மா்மச்சாவு

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அனுமன்தீா்த்தத்தில் மேம்பாலத்துக்கு கீழே ஒருவா் இறந்துகிடப்பதாக ஊத்... மேலும் பார்க்க

சிறந்த பட்டு விதைக்கூடு உற்பத்தியாளா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

மாநில அளவில் பரிசு பெற்ற சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பாராட்டு தெரிவித்தாா். பட்டு வளா்ச்சித் துறை சாா்பில், மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்... மேலும் பார்க்க