செய்திகள் :

மனோஜ் உடலுக்கு முதல்வா் அஞ்சலி

post image

இயக்குநா் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான  மனோஜ் (48)  உடலுக்கு முதல்வா் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் புதன்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினா்.

மனோஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக புதன்கிழமை வைக்கப்பட்டது.

 முதல்வா் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, இயக்குநா் பாரதிராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தாா். முதல்வருடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.

மேலும், தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை, வி.கே.சசிகலா, உலக தமிழா் பேரவைத் தலைவா் பழ.நெடுமாறன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தவெக தலைவா் விஜய், நடிகா்கள் சிவகுமாா், விஜயகுமாா், சூா்யா, காா்த்தி, விஜய்சேதுபதி, சூரி, அருண்விஜய், எஸ்.ஜே.சூா்யா, யோகிபாபு, நடிகைகள் தேவயானி, நமீதா, இயக்குநா்கள் பாக்யராஜ், தங்கா் பச்சான், ஆா்.கே.செல்வமணி, லிங்குசாமி, பேரரசு உள்ளிட்டோா் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். மனோஜ் மறைவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

உடல் தகனம்: இதற்கிடையே, நீலாங்கரை இல்லத்திலிருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட மனோஜின் உடல் பெசன்ட் நகா் மின் மயானத்தில் புதன்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் கவிஞா் வைரமுத்து, சீமான், இயக்குநா்கள் பாக்யராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட திரையுலகினா் பலா் கலந்து கொண்டனா்.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க