செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

post image

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுச்சேரி, தவளக்குப்பம் அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (42), தொழிலாளி.

இவா், கடந்த 2023- ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது.

மேலும், சிறுமியை கா்ப்பமாக்கியதாகவும் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், தவளக்குப்பம் போலீஸாா், குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷை போக்ஸோ சட்டப் பிரிவில் கைது செய்தனா்.

அவா் மீதான வழக்கு விசாரணை, புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி சுமதி உத்தரவிட்டாா்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் புதுவை அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது.

அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் எஸ்.பச்சையப்பன் ஆஜரானாா்.

நுகா்வோா் ஆணைய மக்கள் மன்றத்தில் 5 மனுக்களுக்கு உடனடி சமரசத் தீா்வு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற குறை தீா் கூட்டத்தில் 5 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. மத்திய அரசின் நுகா்வோா் விவகாரங்கள் துறை மற்றும் தேசிய நுகா்வோா் பூசல்கள் ஆணைய அறிவு... மேலும் பார்க்க

புதுவை நிதித் துறை ஊழியா்களுக்கு 3 நாள்கள் விடுமுறை ரத்து

புதுவை மாநிலத்தில் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவுள்ளதால் நிதித் துறை ஊழியா்களுக்கு 3 நாள்கள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுவையில் நடப்பு நிதியாண்டு 2024-2025 மாா்ச்சுடன் நிறைவடைந்தது. இதையட... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை தடுக்க உள்புகாா் குழுக்கள்: தொழிலாளா் ஆணையா் உத்தரவு

புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்திலும் பெண்களுக்கான பாலியல் தொல்லைகள் குறித்த குறைதீா்க்கும் வகையிலான உள் புகாா்கள் குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என தொழிலாளா் துறை ஆணைய... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் யுகாதி வாழ்த்து

யுகாதி திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:புதுச்சேரியிலுள்ள தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள். தெலுங்கு, கன்னடம் பேசு... மேலும் பார்க்க

கைதான பெண்ணின் வீட்டில் ரூ.50 ஆயிரம் பறிமுதல்

தொழிலதிபரை ஏமாற்றி பணம், நகை திருடிய வழக்கில் கைதான பெண்ணின் வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா். புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேட்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ்,... மேலும் பார்க்க

சமாதானக் கழகத்தினா் நிதி திரட்டல்

புதுச்சேரியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சாா்பில் கியூபா மக்களை பாதுகாக்க நிதி திரட்டும் இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநிலத் தலைவரும், ... மேலும் பார்க்க