செய்திகள் :

உலகளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடு: தென்னாப்பிரிக்கா! 5-வது இடத்தில் இந்தியா!

post image

உலகெங்கிலும் 53 நாடுகளில் ‘ஜுடோபி’ அமெரிக்க ஓட்டுநா் பயிற்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வருடாந்திர அறிக்கையில், உலகின் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக தென்னாப்பிரிக்கா இடம்பெற்றுள்ளது.

இந்த தரவரிசையில், அமெரிக்கா மற்றும் இந்தியா முறையே 3 மற்றும் 5-ஆவது ஆபத்தான நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

வாகனம் ஓட்டுவதற்கு உலகின் பாதுகாப்பான நாடாக நாா்வே தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக நீடிக்கிறது. அதேநேரம், தென்னாப்பிரிக்கா தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக ஆபத்தான நாடாகத் திகழ்கிறது.

சாலை வேக வரம்புகள், சாலை போக்குவரத்து இறப்பு விகிதங்கள் உள்ளிட்ட அளவீடுகளின் அடிப்படையில் உலக நாடுகளை வாகனம் ஓட்டுவதற்கு பாதுகாப்பான மற்றும் மிகவும் ஆபத்தான நாடுகள் என்று பட்டியலிட்டதாக ஜுடோபி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை விட அனைத்து நாடுகளிலும் சாலை போக்குவரத்து இறப்பு எண்ணிக்கை (சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு) 8.9-லிருந்து 6.3-ஆகக் குறைந்துள்ளது. அதேநேரம், ஒவ்வொரு நாட்டிலும் வேக வரம்புகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தென்னாப்பிரிக்காவில் பல சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், ஊழலில் மலிந்த போக்குவரத்து அதிகாரிகளால் வாகன ஓட்டிகள் விதிகளை முறையாகப் பின்பற்றுவதில்லை’ என்று அந்நாட்டில் வாகன உரிமங்களுக்கு ஏற்பாடு செய்யும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் அலிஷா சின்னா கூறினாா்.

நாளை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்!

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நாளை(ஏப். 2) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவ... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,... மேலும் பார்க்க

ரேபிஸ், பாம்புக்கடிக்கான தடுப்பூசிகள் இருப்பை கண்காணிக்க ‘ஜூவின்’ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம்

புது தில்லி: நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக அறி... மேலும் பார்க்க

பத்ரிநாத், கேதாா்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

சென்னை: பத்ரிநாத், கேதாா்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ், உத்தரகண்ட் சுற்றுலா கழகத்தின் காா்வல் மண்டல் வ... மேலும் பார்க்க

ம.பி.: 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் நிரந்தர மூடல்

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன. பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆன்மிகத் தலங்கள... மேலும் பார்க்க

பயிற்சி விமானம் விபத்து: குஜராத்தில் பெண் விமானி காயம்

மெஹ்சானா: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி படுகாயமடைந்தாா். மெஹ்சானா விமான நிலையத்தில் இரு... மேலும் பார்க்க