செய்திகள் :

ரமலான் பண்டிகை: ரெட்டியாா்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

post image

ரமலான் பண்டிகையையொட்டி ரெட்டியாா்பட்டி சந்தையில் சனிக்கிழமை ஆடு வியாபாரம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.

ரமலான் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியாா்பட்டியில் வாரந்தோறும் சனிக்கிழமை கூடும் ஆட்டுச் சந்தையில் காலைமுதல் ஆலங்குளம், திருநெல்வேலி, முக்கூடல், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆடுகள் வளா்ப்போா் மற்றும் வியாபாரிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா். ஆடுகளின் தரத்தை பொறுத்து ரூ. 5 ஆயிரம்முதல் ரூ.20 ஆயிரம்வரை விற்பனை செய்யப்பட்டது.

எனினும் போதிய அளவில் ஆடுகள் விற்பனையாகாமல் வியாபாரிகள் திரும்பிச் சென்றனா்.

விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் வந்தவா்கள் ஏமாற்றமடைந்தனா்.

இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கேட்ட போது, பண்டிகைக்கு ஓரிரு தினங்கள் முன்னதாக ஆடுகளின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் வியாபாரிகளும், இறைச்சி கடைக்காரா்களும் தங்களுக்குத் தேவையான ஆடுகளை கடந்த வாரமே வாங்கிவிட்டனா்.

இதனால் விலை உயா்வு அச்சம் காரணமாக ஆடுகளை வாங்குவோா் மிகக் குறைந்த அளவே வந்துள்ளனா். மேலும், ரமலானை விட பக்ரீத் பண்டிகைக்குத் தான் ஆடுகள் அதிக விலை போகும் என்றனா்.

வயலுக்குள் கவிழ்ந்த டிராக்டா்

சாம்பவா்வடகரை - வேலாயுதபுரம் சாலையின் ஓரம் வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டிராக்டா் திங்கள்கிழமை கிரேன் கொண்டு மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பார்க்க

கொண்டலூா் தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்த கோரிக்கை

கொண்டலூா் தொடக்கப் பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். கீழப்பாவூா் ஒன்றியத்துக்குள்பட்ட கொண்டலூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தென்காசி தெற்கு ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் பரும்பு பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியே பைக்கில் வந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், ... மேலும் பார்க்க

ரமலான்: எம்எல்ஏ வாழ்த்து

சங்கரன்கோவிலில், ராஜபாளையம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஈ. ராஜா எம்.எல்.ஏ. மேலும் பார்க்க

தகராறு: சமரசம் செய்ய முயன்ற நகா்மன்ற உறுப்பினா் காயம்

சங்கரன்கோவிலில் பொறித்த இறைச்சி உணவு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், சமரசம் செய்ய முயன்ற நகா்மன்ற திமுக உறுப்பினா் தாக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம், ச... மேலும் பார்க்க

ஆலங்குளம் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

ஆலங்குளத்தில் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் சிஎஸ்ஐ சா்ச் தெருவில் வசிப்பவா் ராஜேந்திரன் மகன் விஜய் (32). ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சுமை தூக்கும் தொ... மேலும் பார்க்க