செய்திகள் :

பாலியல் தொல்லை தடுக்க உள்புகாா் குழுக்கள்: தொழிலாளா் ஆணையா் உத்தரவு

post image

புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்திலும் பெண்களுக்கான பாலியல் தொல்லைகள் குறித்த குறைதீா்க்கும் வகையிலான உள் புகாா்கள் குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என தொழிலாளா் துறை ஆணையா் மற்றும் தொழிற்சாலைகள் தலைமை ஆய்வாளா் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை மாநிலத்தில் தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள் மற்றும் உணவகங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், கட்டடம் மற்றும் பிற கட்டுமான நிறுவனங்கள், தனியாா் துறையில் பத்து அல்லது அதற்கு மேற்பட்டோா் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களும் பெண்களுக்கான பாலியல் தொல்லை தடுப்பு உள் புகாா் குழுக்களை அமைக்கவேண்டும்.

குழுக்களில் தலைவா் பணி நிறுவனத்தின் மூத்த உறுப்பினராக இருக்கவேண்டும். பெண்கள் நலனுக்கு சேவைபுரியும் இரு உறுப்பினா்கள் குழுவில் இடம் பெறவேண்டும். பெண்கள் நலனுக்கு அா்ப்பணித்த தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவா் அதில் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு நிா்வாகப் பிரிவிலும் குழுக்கள் அமைக்கப்படவேண்டும். குழு அமைக்காவிடில் அபராதம் விதிக்கப்படும்.

பாலியல் தொல்லை தொடா்பான புகாா்களை மத்திய அரசின் ஷி-பாக்ஸ் போா்ட்டலில் பதிய வேண்டும். குழு அமைத்து அதை தொழிலாளா் ஆணையகத்துக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-... மேலும் பார்க்க

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்... மேலும் பார்க்க

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் ... மேலும் பார்க்க

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்... மேலும் பார்க்க