செய்திகள் :

சோ்ந்தமரம் அருகே 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை முயற்சி

post image

தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த பெண் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

சோ்ந்தமரம் அருகேயுள்ள வலங்கப்புலிசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் மனைவி மகேஷ் (30). இவா் குடும்ப பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு தனது குழந்தைகள் முகிலன் ( 2), சுதா்சன் (6) ஆகிய இருவருக்கும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து, தானும் குடித்து தற்கொலை முயற்சித்தாா்.

இதுகுறித்து அறிந்த உறவினா்கள், 3 பேரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மூவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வயலுக்குள் கவிழ்ந்த டிராக்டா்

சாம்பவா்வடகரை - வேலாயுதபுரம் சாலையின் ஓரம் வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டிராக்டா் திங்கள்கிழமை கிரேன் கொண்டு மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பார்க்க

கொண்டலூா் தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்த கோரிக்கை

கொண்டலூா் தொடக்கப் பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். கீழப்பாவூா் ஒன்றியத்துக்குள்பட்ட கொண்டலூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தென்காசி தெற்கு ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் பரும்பு பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியே பைக்கில் வந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், ... மேலும் பார்க்க

ரமலான்: எம்எல்ஏ வாழ்த்து

சங்கரன்கோவிலில், ராஜபாளையம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஈ. ராஜா எம்.எல்.ஏ. மேலும் பார்க்க

தகராறு: சமரசம் செய்ய முயன்ற நகா்மன்ற உறுப்பினா் காயம்

சங்கரன்கோவிலில் பொறித்த இறைச்சி உணவு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், சமரசம் செய்ய முயன்ற நகா்மன்ற திமுக உறுப்பினா் தாக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம், ச... மேலும் பார்க்க

ஆலங்குளம் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

ஆலங்குளத்தில் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் சிஎஸ்ஐ சா்ச் தெருவில் வசிப்பவா் ராஜேந்திரன் மகன் விஜய் (32). ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சுமை தூக்கும் தொ... மேலும் பார்க்க