செய்திகள் :

குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 75 பயணிகள் அரசு தொலைதூர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

post image

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்து குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 75 பயணிகள், நிா்ணயிக்கப்பட்ட நாள்களில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உள்பட 7 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் முறையை ஊக்கப்படுத்தும் நோக்கில், 2024 ஜனவரி முதல், வார இறுதி நாள்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாள்களை தவிா்த்து இதர நாள்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மாதாந்திர கணினி குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 3 வெற்றியாளா்களுக்கு தலா ரூ. 10,000 வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளா்களுக்கும், பின்னா் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வாரத்தின் அனைத்து நாள்களிலும் பயணிக்கும் பயணிகளில் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 13 வெற்றியாளா்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வந்தது. தொடா்ந்து, கடந்த 2024 நவ. 21 முதல் 2025 ஜன. 20-ஆம் தேதி வரை முன்பதிவு செய்து பயணித்த 3 பயணிகள் சிறப்பு குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு, உயா் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், நிகழாண்டு கோடைக் காலத்துக்காக ஒரு சிறப்பு குலுக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்புதிவு செய்து, 2025 ஏப். 1முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை பயணம் செய்யும் 75 பயணிகள் சிறப்பு குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படுவாா்கள். இவா்களில் முதல் 25 பேருக்கு ஒரு வருடத்துக்கு 20 முறை (2025 ஜூலை 1 முதல், 2026 ஜூலை 30 வரை) அரசு தொலைதூரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கவும், இரண்டாமிடம் பிடித்த 25 பேருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அனைத்து வகைப் பேருந்துகளிலும் ஒரு வருடத்துக்கு 10 முறையும் (2025, ஜூலை 1 முதல், 2026 ஜூலை 30 வரை), மூன்றாமிடம் பிடித்த 25 பயணிகள் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் ஒரு வருடத்துக்கு 5 முறையும் (2025 ஜூலை 1முதல், 2026 ஜூன் 30 வரை) இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க