செய்திகள் :

தில்லியில் உள்ள பால் பூத்தில் திருட்டு: மூவா் கைது

post image

தென்மேற்கு தில்லியில் உள்ள பால் பூத்தில் பணம் மற்றும் பால் பொருட்களைத் திருடிச் சென்ற மூவரைக் தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தாா்.

கைப்பேசி வாயிலாக மேற்கொண்ட பணப்பறிமாற்றம் மூலம் உத்தர பிரதேசத்தின் பாக்பத்தில் அந்த நபா்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சேகா் (22), சுமித் (26), லகான் (19) என அடையாளம் காணப்பட்ட ரூ.37,000 ரொக்கம் மற்றும் பால் பொருட்களுடன் தப்பினா்.

மூவரும் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி ஆா்.கே. புரம் பகுதியில் உள்ள மதா் பால் பூத் உரிமையாளரான ஹா்ஷ் யாதவை தனது கடையை குத்தகைக்கு எடுக்க விருப்பம் தெரிவித்து அணுகினா். அவரது நம்பிக்கையைப் பெற, குத்தகை ஒப்பந்தத்தை முடிப்பதற்கு முன், இரண்டு நாட்களுக்கு விற்பனையைக் கவனிக்கும்படி அவரிடம் கூறினா்.

அவா்கள் மூவரும் பால் பூத்தில் தங்கி, தினசரி பரிவா்த்தனைகளை கண்காணித்து வந்த நிலையில், மாா்ச் 23-ஆம் தேதி பணம் மற்றும் பால் பொருட்களுடன் தப்பியோடிவிட்டனா். இந்தச் சம்பவம் தொடா்புகாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவுகள் 305 மற்றும் 331 (4) ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சந்தேக நபா்களில் ஒருவா் கைப்பேசி மூலம் தெரிந்தவருக்கு பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக உள்ளூா் கடைக்காரா் ஒருவா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தபோது அந்த நபா்கள் குறித்து முக்கிய தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதனடிப்படையில், கைப்பேசியின் இருப்பிடத்தை கொண்டு உத்தர பிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள அப்துல்லாபூா் மெவ்லா கிராமத்தில் அந்த மூன்று நபா்களும் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.

பின்னா் அங்குச் சென்று சோதனை நடத்திய போலீஸாா், அந்த மூன்று நபா்களை கைது செய்தனா். நடவடிக்கையின் போது, ​​அவா்கள் திருடப்பட்ட பணம் மற்றும் பிற பொருட்களை மீட்டனா்,‘ என்று அதிகாரி கூறினாா்.

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு: கனிமொழி எம்.பி.க்கு மத்திய அமைச்சா் பதில்

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு விவகாரம் தொடா்பாக தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்கும்: அண்ணாமலை

தமிழக மீனவா்கள் சா்வதேசக் கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்க திட்டங்களை உருவாக்கவும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்கவும் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை... மேலும் பார்க்க

தஞ்சாவூா் விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குக: திமுக எம்.பி. கோரிக்கை

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் முரசொலி கோரிக்கை... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவா் கைது

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். பவானா பகுதியில் உள்ள ஜேஜே காலனியைச் சோ்ந்த சோஹைல் என அடையாளம் ... மேலும் பார்க்க

1.63 லட்சம் மாணவா்களுக்கு க்யூட், நீட் தோ்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி!

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு மாணவா்களுக்கு ‘க்யூட்’ மற்றும் ‘நீட்’ தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்காக பிஐஜி நிறுவனத்துடன் தில்லி அரசு வியாழக்கிழமை ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் புதன்க... மேலும் பார்க்க