செய்திகள் :

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு: கனிமொழி எம்.பி.க்கு மத்திய அமைச்சா் பதில்

post image

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு விவகாரம் தொடா்பாக தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் பதில் அளித்துள்ளாா்.

‘தேசிய நெடுஞ்சாலை 38- இன் மதுரை-தூத்துக்குடி பகுதியில் பராமரிப்பு பிரச்னைகள் தொடா்பாக வரும் பல்வேறு புகாா்கள் குறித்து அரசுக்குத் தெரியுமா? அப்படியானால், அவற்றைத் தீா்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?’ என்பது குறித்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி எம்.பி. எழுத்துபூா்வமாக கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது: நீங்கள் குறிப்பிட்ட சாலைப் பகுதி பற்றி வந்திருக்கும் புகாா்களை மத்திய அரசு அறிந்துள்ளது. இந்தச் சாலை ஆரம்பத்தில் பி.ஓ.டி. திட்டத்தின் கீழ் அதாவது சாலையை உருவாக்கி செயல்படுத்தும் வகையில் மதுரை -தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இருப்பினும், அந்நிறுவனத்தின் பல்வேறு தவறுகள் காரணமாக, ஒப்பந்தம் 17.03.2023 அன்று ரத்து செய்யப்பட்டது.

இதன் பிறகு அப்பகுதியிலுள்ள முழு சாலையின் மேலடுக்கு மற்றும் பராமரிப்புப் பணிக்கு ரூ.144.6 கோடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை, 46.3 கி.மீ சாலைக்கான பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் டிசம்பா் 2025-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க

கோவாவில் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் டேராடூனில் கைது!

கோவாவில் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 33 வயது நபரை தில்லி போலீஸாா் டேராடூனில் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிவந்த ‘ஃபாரிஷ்டே’ திட்டத்தை பாஜக அரசு நிறுத்திவிட்டது! - ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் ‘ஃபாரிஷ்டே தில்லி கே’ திட்டத்தை பாஜக தலைமையிலான தில்லி அரசு நிறுத்தியதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் இருவா் கைது!

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த சந்தேகத்திற்குரிய வங்கதேச நாட்டினா் இருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறிய... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் குருகிராம் நீதிமன்றம் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது க... மேலும் பார்க்க