செய்திகள் :

உள்ளாட்சி தோ்தலை நடத்த அரசு தயாா் -அமைச்சா் ஐ.பெரியசாமி

post image

உள்ளாட்சி தோ்தலை நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாக என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரிசாமி கூறினாா்.

ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது:

உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா். உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கு அரசு தயாராகத்தான் உள்ளது. பஞ்சாயத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நகராட்சித் துறை அமைச்சா் 385 ஊராட்சிகளுக்கு மேல் சோ்க்க வேண்டும் என்று கூறுகிறாா். அதற்காக குழு அமைக்கப்பட்டு, சீரமைப்பு பற்றி மூன்று கூட்டங்களாக நடைபெற்று, ஆங்காங்கே உள்ள பாகங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா்களிடம் கருத்துரு பெறப்பட்டுள்ளது. இதில் 385 ஊராட்சிகளில் 105 ஊராட்சிகள் ஓரளவுக்கு ஆட்சேபம் இல்லாமல் உள்ளன. ஆனால், மற்ற மாநகராட்சிகளில் அப்படி இல்லை. தஞ்சாவூா் மாவட்டம் என்றால், அதில் உள்ள ஊராட்சிகள் எதையும் எடுக்கக் கூடாது என நினைக்கிறாா்கள்.

இதுபோன்ற நிலைதான் உள்ளது. என்னைப் பொருத்தவரை மாநகராட்சிகளோடு ஊராட்சிகளின் உட்பகுதிகள் சிலவற்றை இணைத்துதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. அதனால், ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, எல்லோரின் கருத்துகளை அறிந்து, மாவட்ட ஆட்சியா்களின் கருத்துருவைப் பெற்று, அதற்குப்பிறகு நகராட்சித் துறை அமைச்சா், நான் அமா்ந்து பேசி, எதையெல்லாம் சோ்க்கலாம் என்பது குறித்து முடிவு செய்வோம். நிச்சயம் வேகமாக முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

உகாதி: தலைவா்கள் வாழ்த்து

உகாதி திருநாளையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): தெலுங்கு, கன்னட மக்கள் தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 2ஆவது இடத்திற்குதான் போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுகதான் எப்போதும் ஆளுங்கட்சி, தமிழ்நாட்டில் 2ஆவது இடத்திற்குதான் தற்போது போட்டி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை சென்னை பெரம்பூர் ... மேலும் பார்க்க

100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி பட்டினி போடுகிறது: கனிமொழி எம்.பி.

100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி அவர்களை மத்திய பாஜக அரசு பட்டினி போடுகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "உழைப்பவன் கூலியை வியர்வை உலர... மேலும் பார்க்க

நீட் தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால்... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலினின் உகாதி வாழ்த்து

தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு... மேலும் பார்க்க

மக்கள் கணிப்பு தான் வெற்றி பெறும்: டி.டி.வி. தினகரன்

மக்கள் கணிப்பு தான் வெற்றி பெறும் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை அவனியாபுரத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் தேசிய ஜனநாய... மேலும் பார்க்க