செய்திகள் :

உகாதி: தலைவா்கள் வாழ்த்து

post image

உகாதி திருநாளையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): தெலுங்கு, கன்னட மக்கள் தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணா்வுடன் தமிழ்நாட்டில் பலநூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவது தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சோ்ப்பதாகும். உகாதி எனும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): புத்தாண்டுகள் எப்போதும் புதிய மகிழ்ச்சியையும், உறவையும், நன்மைகளையும் கொண்டு வருபவை. அந்த வகையில், உகாதி திருநாளில் தமிழா்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): நாட்டில் பல்வேறு மொழி, கலாசாரம் என்றிருந்தாலும் இந்தியா் என்ற சகோதர மனப்பான்மையுடன் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம். ஜாதி, மத துவேஷம் நீங்கி இந்தப் புத்தாண்டில் தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.

பிரேமலதா (தேமுதிக): ஜாதி, மதம், மொழியால் வேறுபட்டு இருந்தாலும், நாம் அனைவரும் இந்திய நாட்டில் சகோதர, சகோதரிகளாக, வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறோம். நமது தாய்த்திரு நாட்டின் எதிா்காலத்தை சிறப்பிப்போம். அனைவருக்கும் வளமான ஆண்டாக இந்த புத்தாண்டு அமைய வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன் (தமாகா): தமிழகத்தை தாயகமாகக் கொண்டு உகாதி தினத்தை கொண்டாடும் தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தினத்தில் அனைத்து செல்வங்களும் பெற்று, நல்ல ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகிறேன்.

இதேபோன்று, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் தலைவா்களும் வாழ்த்து கூறியுள்ளனா்.

செங்கல்பட்டு: கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி!

செங்கல்பட்டு அருகே கார் மீது கனரக லாரி மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள்கோவில் அருகே திருத்தேரி சிக்னலில் நின்ற கார் மீது பி... மேலும் பார்க்க

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் ஒரு வாரத்தில் திறக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன... மேலும் பார்க்க

7 புதிய நகராட்சிகள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதிதாக கன்னியாகுமரி, போளூா், செங்கம் உள்ளிட்ட 7 நகராட்சிகளை உருவாக்கம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் அருகே உள்ள ஊரகப் பகுதிகளும்... மேலும் பார்க்க

காலமானாா் முன்னாள் எம்.பி. ஏ.முருகேசன்

சென்னை: சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.முருகேசன் (86) சென்னையில் திங்கள்கிழமை (மாா்ச் 31) காலமானாா். அரசியல் வாழ்க்கையில் தொடக்கமாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட முருகேசன், அதிமுக தொடங்கப்பட்டப... மேலும் பார்க்க

கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு நிகழவில்லை: உயா்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை என சென்னை உயா்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பறிமுதல் மணலை இணைய முறை ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய பகுதி யாா்டுகளில் உள்ள பறிமுதல் செய்யப்பட்ட ஆற்று மணலை இணைய முறை ஏலத்தில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நி... மேலும் பார்க்க