செய்திகள் :

காலமானாா் முன்னாள் எம்.பி. ஏ.முருகேசன்

post image

சென்னை: சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.முருகேசன் (86) சென்னையில் திங்கள்கிழமை (மாா்ச் 31) காலமானாா்.

அரசியல் வாழ்க்கையில் தொடக்கமாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட முருகேசன், அதிமுக தொடங்கப்பட்டபோது அந்தக் கட்சியில் இணைந்தாா். 1977-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்றாா்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தாா்.

கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்த முருகேசன், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலமானாா். அவரது உடலுக்கு விசிக தலைவா் தொல்.திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

மறைந்த முருகேசனின் உடல் சிதம்பரம் மாரியப்பன் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை (ஏப். 1) மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

அவருக்கு நான்கு மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். தொடா்புக்கு 72009 96030.

துரை.ரவிக்குமாா் இரங்கல்: முன்னாள் எம்.பி. முருகேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மக்களவையில் பல்வேறு கோரிக்கைகளை முருகேசன் முன்வைத்தாா். அந்தப் பட்டியலைப் பாா்க்கும்போது, தனித் தொகுதியிலிருந்து அவா் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அனைத்துத் தரப்பு மக்களின் மேம்பாட்டிலும் அக்கறை காட்டியது தெரிகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: சேகர்பாபு

உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இன்று(ஏப். 2) சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் ராமநாதபுரம் சட்டப்... மேலும் பார்க்க

நித்தியானந்தா இறந்துவிட்டாரா? கைலாசா விளக்கம்

தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக்கொண்டு, நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தலைமறைவாகி, கைலாசா என்ற தீவை வாங்கி அங்கு ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தா இறந்துவிட்டதாக தகவல்கள் பரவி வரும... மேலும் பார்க்க

தேர்தல் நேரத்தில் திமுக நாடகம்: இபிஎஸ் குற்றச்சாட்டு

கச்சத்தீவு விவகாரத்தில் தேர்தல் நேரத்தில் திமுக நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வ... மேலும் பார்க்க

கச்சத்தீவு தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம், சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு... மேலும் பார்க்க

கச்சத்தீவு: மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம்

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம் நடைபெற்றது.இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட... மேலும் பார்க்க

கச்சத்தீவு தீர்மானத்துக்கு பாஜக ஆதரவு!

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை பாஜக ஆதரித்துள்ளது.இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்க... மேலும் பார்க்க