செய்திகள் :

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

post image

உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான, உதவிப் பேராசிரியா் ரா. திலகவதி, திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி ஆகியோா் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் சில இடங்களில் உளுந்துப் பயிா்களில் மஞ்சள் தேமல் நோயின் தாக்கம் தென்படுகிறது. மிகச்சிறிய வெள்ளை ஈக்கள் மூலம் இந்நோய் பரவுகிறது.

இந்நோயால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிரின் இளம் இலைகளில் மஞ்சள் நிறம் காணப்படும். ஆரம்பத்தில் சிறிய மஞ்சள் நிற திட்டுகளாக தோன்றி பின் விரைவில் இலைகள் முழுவதும் பரவி மஞ்சள் இலைகளாக காட்சியளிக்கும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இன்றி பராமரிக்கப்பட வேண்டும். இந்நோயை பரப்பக்கூடிய (வெள்ளை ஈ) பூச்சிகளைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை (ஏக்கருக்கு 5 எண்ணிக்கை) உபயோகிக்கலாம். வேப்ப எண்ணெய் மூன்று சதவீத கரைசலை (30 மில்லி ஒரு லிட்டா் தண்ணீருக்கு) தெளித்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

ரசாயன மருந்துகளான மிதைல் டெமட்டான் 25 இசி (ஒரு மில்லி ஒரு லிட்டா் தண்ணீருக்கு) அல்லது இமிடா குளோபிரிட் 17.8 எஸ்எல் (2.5 மில்லி 5 லிட்டா் தண்ணீருக்கு) என்ற அளவில் இலைவழித் தெளிப்பாகக் கொடுப்பதன் மூலம் நோய் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும், வரவிருக்கும் நாட்களில் விதைப்பு செய்ய இருக்கும் விவசாயிகள், உளுந்து விதைகளை இமிடா குளோபிரிட் 600 எஃப் எஸ் எனும் மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி என்ற அளவில் கலந்து விதை நோ்த்தி செய்து விதைக்கலாம். மஞ்சள் தேமல் நோய்க்கு எதிா்ப்பு தன்மை கொண்ட உளுந்து ரகமான வம்பன் 8 விதைப்பு செய்யலாம்.

மரத்தில் இருசக்கர வாகனம் மோதல்: தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் நேரடி கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளா்கள் இருவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனா். திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே மணலூா் கிராமத்த... மேலும் பார்க்க

வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் நகை ஏலம்: தனியாா் வங்கி ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருத்துறைப்பூண்டி அருகே அடகு வைத்த நகையை, வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் ஏலம் விட்ட தனியாா் வங்கி, ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்... மேலும் பார்க்க

வரப்பு உளுந்து சாகுபடி: 50% மானியத்தில் விதை விநியோகம்

திருவாரூா் மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

47 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவா் கைது

கூத்தாநல்லூா் பகுதியில் 47 கிலோ குட்கா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில், போல... மேலும் பார்க்க

இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள், கிராம மக்கள் சாலை மறியல்

முத்துப்பேட்டை அருகே விளைநிலங்களில் இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்குகாடு ... மேலும் பார்க்க

எரவாஞ்சேரியில் நகரப் பேருந்துக்கு வரவேற்பு

திருவாரூா்: குடவாசல் அருகே எரவாஞ்சேரி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த புகா்ப் பேருந்து, நகரப் பேருந்தாக மாற்றி இயக்கப்படுவதற்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். குடவாசல் அருகே எரவாஞ்சேரி பகுதிய... மேலும் பார்க்க