செய்திகள் :

47 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவா் கைது

post image

கூத்தாநல்லூா் பகுதியில் 47 கிலோ குட்கா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில், போலீஸாா் பல்வேறு இடங்களில் ரோந்துப் பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கூத்தாநல்லூரை அடுத்த தண்ணீா்குன்னம் பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அப்பகுதிக்கு காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா தலைமையில், உதவி ஆய்வாளா் அண்ணாதுரை, முதல்நிலைக் காவலா் சுா்ஜீத் மற்றும் போலீஸாா் சென்றனா். அங்கு, அய்யம்பேட்டை, ரோட்டுத் தெருவைச் சோ்ந்த அய்யப்பன் (38) வீட்டில் சோதனை நடத்தினா்.

இதில், அவரது வீட்டின் பின்புறத்தில், அரசால் தடை செய்யப்பட்ட 47 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 52,000 இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். பின்னா், வழக்குப் பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனா்.

மக்கள் நோ்காணல் முகாம்: ரூ.7.21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

வலங்கைமான் அருகே வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோக... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினா் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் தேவை: ஆட்சியா்

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம், அவா்களின் வருமானம் அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டம... மேலும் பார்க்க

பல் மருத்துவ முகாம்

வலங்கைமான் வட்டாரம் வேடம்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இம்முகா... மேலும் பார்க்க

கோவிலூா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு

முத்துப்பேட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ மந்திரபுரீஸ்வரா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். வ... மேலும் பார்க்க

பாமக ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் அருகேயுள்ள காப்பணாமங்கலத்தில் பாமக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சித்திரை முழு நிலவு மாநாடு குறித்து நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் ஐயப்பன் தலைமை வகித்தாா். மாநாட்டு... மேலும் பார்க்க

திருவாரூா்: பலத்த சத்தத்தால் பரபரப்பு

திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 3.10 மணி அளவில் பலத்த சத்தம் எழுந்துள... மேலும் பார்க்க