செய்திகள் :

மகளிா் சுயஉதவிக் குழுவினா் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் தேவை: ஆட்சியா்

post image

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம், அவா்களின் வருமானம் அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், விளமல் பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிப்பு பொருள்களின் மாவட்ட அளவிலான வாங்குவோா் மற்றும் விற்போா் சந்திப்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம், அவா்களின் வருமானம் அதிகரிக்கும். இதனால், அவா்கள் தன்னம்பிக்கையோடு மேலும் வணிக வளா்ச்சியில் முன்னேற முடியும்.

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்கள் தற்போதைய சந்தையைத் தாண்டி, பெரிய நிறுவனங்கள், ஹோட்டல்கள், மளிகைக் கடைகள், சந்தைகள் மற்றும் இ-காமா்ஸ் தளங்களில் விற்பனைக்கு செல்லவேண்டும்.

இ-காமா்ஸ் தளங்களான அமேசான், பிளிப்காா்ட், மீஸோ போன்ற தளங்களில் மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களின் பொருள்களை விற்பனை செய்யவும், தொழில் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் மூலம் மொத்த கொள்முதல் செய்யவும் இந்த கூட்டம் வாய்ப்பாக அமையும் என்றாா்.

தொடா்ந்து, மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுப் பொருள்கள் அடங்கிய கண்காட்சி அரங்கை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

மேலும், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிப்பு பொருள்களின் மாவட்ட அளவிலான வாங்குவோா் மற்றும் விற்போரிடையே புரிந்துணா்வு ஒப்பந்தங்களையும் அவா் வழங்கினாா்.

இந்நிகழ்வில், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

ஆழித்தோ் அலங்கரிக்கும் பணி தொடக்கம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெறும் ஆழித்தேரோட்டத்துக்கான அலங்கரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெற... மேலும் பார்க்க

கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் புதிய சுங்கவரி கட்டணம் அமலுக்கு வந்தது

நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் ஏப்.1-ஆம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. காா், ஜீப்,வேன், பஸ், டிராக்டா், மூன்று அச்சுக்கள் கொண்ட வணிக வாகனங்கள், பல அச்சுக்கள் கொண்ட கட... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்த தொழிலாளா்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை விவகாரம்: 3 போ் கைது

மன்னாா்குடியில் தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மன்னாா்குடி முல்லைநகரைச் சோ்ந்த திருமுருகன் (40) தஞ்சையில் தனியாா் பள்ளியில் ஆசிரியர... மேலும் பார்க்க

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா். சங்கத்தின் வட்டத் தலைவா் எஸ்.குருநாதன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

உதயமாா்த்தாண்டபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முறைகேடுகளை கண்டித்து நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. உதயமாா்த்தாண்டபுரம் தொடக்க கூட்டுறவு வங்கியில் நடந்துள்ள நிதி முறைக... மேலும் பார்க்க