செய்திகள் :

ரூ.2,200 கோடியில் 770 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்: அமைச்சா் எ.வ.வேலு

post image

முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் நிகழாண்டு 220 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள் நான்குவழிச் சாலையாகவும், 550 கி.மீ. சாலைகளை இருவழிச் சாலையாகவும் ரூ.2,200 கோடியில் அகலப்படுத்தி, மேம்படுத்தப்படும் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்புகள்:

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் சட்டப்பேரவை உறுப்பினா்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புறவழிச்சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ஆற்றுப் பாலங்கள், மழைநீா் வடிகால் கட்டுதல் போன்ற பணிகள் ரூ.250 கோடியில் எடுத்துக் கொள்ளப்படும்.

நான்குவழிச்சாலை: முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ரூ.2,200 கோடியில் விருத்தாசலம் - தொழுதூா் சாலை, கொடைரோடு - வத்தலகுண்டு சாலை, சிவகாசி- விருதுநகா் சாலை உள்ளிட்ட 220 கி.மீ. நீள சாலைகள் நான்கு வழிச் சாலைகளாகவும், 550 கி.மீ. நீள சாலைகள் இருவழிச் சாலைகளாகவும் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.

முதலமைச்சரின் அனைத்து பருவ காலங்களிலும் தங்கு தடையற்ற சாலை இணைப்புத் திட்டத்தின் கீழ் 84 தரைப்பாலங்கள், உயா்நிலைப் பாலங்களாக ரூ.466 கோடியில் கட்டப்படும்.

ஆத்தூா் நகா் மற்றும் ஓசூா் மாநகருக்குப் புறவழிச் சாலைகள் ரூ.550 கோடியில் அமைக்கப்படும். தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி, ராசிபுரம் பேருந்து நிலையம் மற்றும் முட்டம் பாலம் ஆகிய 3 இணைப்புச் சாலைகள் ரூ.230 கோடியில் மேற்கொள்ளப்படும்.

6 உயா்நிலை பாலங்கள்: ராணிப்பேட்டையில் விருத்தகசீரக ஆற்றின் குறுக்கே (தண்டலம் - பேரம்பாக்கம் - தக்கோலம் - அருகில்பாடிசாலையில்) பாலம், தஞ்சாவூா் வெண்ணாற்றின் குறுக்கே (திருக்காட்டுப்பள்ளி - செங்கிப்பட்டி - பட்டுக்கோட்டை சாலையில்) பாலம், திருச்சியில் கோரையாற்றின் குறுக்கே (திருச்சி - மேலூா் - மதுரை சாலையில்) பாலம், ஆத்துப் பொள்ளாச்சியில் ஆழியாற்றின் குறுக்கே (ஆத்துப்பொள்ளாச்சி - காளியப்பன் கவுண்டன் புதூா் சாலையில்) பாலம், செவிலிமேட்டில் பாலாற்றின் குறுக்கே (காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில்) பாலம், திருக்கோவிலூா் அரகண்டநல்லூா் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் என 6 உயா்நிலை பாலங்கள் ரூ.295 கோடியில் புதிதாக கட்டப்படும்.

ரயில்வே கடவுகளுக்கு மாற்றாக 10 ரயில்வே மேம்பாலங்கள், ஒரு கீழ்ப்பாலம் ரூ.787 கோடியில் கட்டப்படும். அதில் சென்னை அம்பத்தூரில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்தும் பணியும் நடைபெறும்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வழியாக கஸ்டம்ஸ் சாலை ரூ.50 கோடியில் அமைக்கப்படும்.

கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 1,000 கி.மீ. நீள ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.1,000 கோடியில் இதர மாவட்ட சாலைகளாக தரம் உயா்த்தி மேம்படுத்தப்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வெள்ளிமலை சின்னதிருப்பதி ஊராட்சி ஒன்றிய சாலையை மாவட்ட இதர சாலையாக ரூ.98.50 கோடியில் தரம் உயா்த்தி மேம்படுத்தப்படும்.

திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரி மலையில் சுற்றுலா மேம்பாட்டுக்காக 10 கி.மீ. நீள சுற்றுச்சாலை ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும் என்றாா் அமைச்சா்.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க